சிறு குழந்தைகள் படுக்கையிலேயே
சிறுநீர் கழிப்பது உண்டு. அதற்கு 3 காரணங்கள் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது.
1. மரபு ரீதியானது,
2. ஹார்மோன் மாற்றங்கள்,
3. கவலை மற்றும் பயம்.
இவை தவிர சிறுநீர் பை சரிவர வளர்ச்சி அடையாததாலும் தன்னை அறியாமல் சிறுநீர் கழிக்க வாய்ப்பிருக்கிறது.
இதனை தடுப்பது எப்படி?
* படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக குழந்தைகளை அடிக்கவோ, திட்டவோ கூடாது.
* குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படும்படியாக பேச வேண்டும். பயம், கவலை ஏற்பட
காரணங்கள் என்ன என்பதை புரிந்து கொண்டு நம்பிக்கையூட்டுங்கள்.
* இரவில் அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் மற்றும் திரவ உணவுகள் கொடுபதையும் நிறுத்துங்கள்.
* 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் படுக்கையில் சிறுநீரை உறிஞ்சும் துண்டுகளை விரிக்கலாம்.
* குழந்தையின் படுக்கையை அடிக்கடி சுத்தம் செய்வது மற்றும் மாற்று ஏற்பாடுகளை செய்வது அவர்கள் நிம்மதியாக உறங்க உதவும்.
* தூங்கச் செல்லும் முன் சிறுநீர் கழித்து விட்டு வந்து படுக்கச் சொல்லலாம்.
* குறிப்பிட்ட நேரங்களில் அவர்கள் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக
வைத்திருந்தால் அந்த நேரத்திற்கு எழுப்பி கழிவறைக்கு கொண்டு சென்று
விடலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...