செயற்கை நுண்ணறிவு என்னும் ஆன்ட்ராய்டு ஆப் மூலம் மாணவர்கள் வருகையை பதிவு செய்யும் புதிய தொழில்
நுட்பத்தை பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார்.
இதற்கான நிகழ்வு சென்னை, அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப்
பள்ளியில் நேற்று நடந்தது.
புதிய தொழில் நுட்ப வருகைப் பதிவை தொடங்கி வைத்து அமைச்சர் செங்கோட்டையன்
பேசியதாவது: மாணவ மாணவியரின் முகத்தை அடையாளமாக வைத்து வருகைப் பதிவு செய்ய
செல்போனில் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் ஒருமுறை மாணவர்களின் போட்டோவை தனியாக படம் பிடித்து, அவர்களின்
விவரங்கள் சேமித்து வைக்கப்படும். அதேபோல ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவ
மாணவியரின் போட்டோக்கள் அதில் சேமிக்கப்படும்.
அதற்கு பிறகு, தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்களை அந்தந்த வகுப்பு
ஆசிரியர்கள் தங்கள் செல்போனில் மாணவ மாணவியரை குழுவாக படம் பிடிப்பார்கள்.
வகுப்புக்கு வந்துள்ள மாணவர்கள், வராதவர்கள் குறித்த விவரங்களை செல்போனில்
உள்ள செயலி காட்டிக் கொடுத்துவிடும்.