இதுவரை 4 விஞ்ஞானிகள் இரண்டு முறை நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள், .
2 முறை நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர் போலந்து நாட்டைச் சேர்ந்த,
பிரெஞ்சு குடியுரிமைப் பெற்ற விஞ்ஞானி மேரி க்யூரி. 1903-ம் ஆண்டு
இயற்பியலுக்கு ஹென்றி பெக்யூரல், பியரி க்யூரியோடு சேர்ந்து இந்தப் பரிசைப்
பெற்றார் மேரி. 1911-ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
அதிக நோபல் பரிசுகளைப் பெற்ற குடும்பமும் இவருடையதுதான். இவரது மகள் ஐரின்
க்யூரியும் அவரது கணவரும் நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள். அமெரிக்க
விஞ்ஞானி ஜான் பார்டீன் 1956, 1972-ம் ஆண்டுகளில் இயற்பியலுக்கான நோபல்
பரிசை வென்றிருக்கிறார். இயற்பியல் துறையில் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற
ஒரே நபர் இவரே. லைனஸ் பாலிங் என்ற அமெரிக்க விஞ்ஞானி 1954-ம் ஆண்டு
வேதியியலுக்கும் 1962-ம் ஆண்டு அமைதிக்கும் நோபல் பரிசுகளைப்
பெற்றிருக்கிறார்.இங்கிலாந்தைச் சேர்ந்த பிரெட்ரிக் சாங்கர் 1958-ம் ஆண்டும் 1980-ம் ஆண்டும் வேதியியலுக்கான நோபல் பரிசுகளைப் பெற்றார். வேதியியலில் இரு முறை நோபல் பரிசுகளைப் பெற்றவர் இவர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...