
சிறுவர்களின் உடல் பருமன் என்பது
இன்றைய தினம் உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஐந்து
வயதுக்குட்பட்ட குழந்தைகள் அளவுக்கு மீறி குண்டாக இருந்தாலே, (உடல்
பரிசோதனையுடன்) நடக்க வைப்பது, பந்து கொடுத்து விளையாட வைப்பது, நீச்சல்
பழகக் கற்றுக்கொடுப்பது, மூன்று சக்கர சைக்கிள் ஓட்டச் சொல்வது போன்ற
பயிற்சிகளில் ஈடுபடுத்தினாலே, அவர்கள் உடல் ஆரோக்கியமாக, வலுவாக வளர
ஆரம்பிக்கும்.
குழந்தைகளுக்கு பள்ளியிலும் வீட்டிலும் பல்வேறு உடற்பயிற்சிகள் மிகவும்
அவசியம். பள்ளியில் உடற்பயிற்சி நேரத்தில் இவர்கள், தங்களை அங்குள்ள
விளையாட்டுக்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு வந்த
பிறகும்கூட, ஏதாவது உடற்பயிற்சி அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடலாம்.
இப்படி இரண்டிலும் 30 நிமிடங்கள் செலவிட்டாலே போதுமானது. இவர்களுக்குத்
தினமும் ஒரு மணி நேரப் பயிற்சி தேவை. வாரத்துக்கு இப்படி 3-4 தடவை
உடற்பயிற்சியில் ஈடுபட்டால் போதுமானது.