இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியமாயாகுளம் நேருஜி மழலையர்
மற்றும் தொடக்கப்பள்ளி மழலையர்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன் பிஞ்சு குரல்களால்
"போடுவோம் ஓட்டு, வாங்கமாட்டோம் நோட்டு, வாக்காளர் என்பதில் பெருமிதம்
கொள்வோம், வாக்களிக்க தயார் என்போம், மனதில் உறுதி வேண்டும், மனசாட்சிபடி
வாக்களிப்போம், தேர்தலில் 100% வாக்களிப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம்''
என கூறி அப்பகுதியில் முழுவதும் பதாகைகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தனர்.
மழலையர்களின் இந்த விழிப்புணர்வு பேரணி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
இதில் பள்ளி தாளாளர் முகம்மது யாகூப், பள்ளி முதல்வர் முகம்மது பயாஸ்கான்,
தலைமையாசியர் அனிதா, கிராம நிர்வாக அலுவலவர் மாரிமுத்து, கிராம உதவியாளர்
சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...