விருதுநகர், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு உயிரியல் பாட வினாக்கள்
எளிமையாகவும், எதிர்பார்த்ததாகவும் இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்
கூறினர்.
என்.லோகேஷ், கே.வி.எஸ்.,மேல்நிலை பள்ளி, விருதுநகர்: அனைத்து வினாக்களும் எளிதாக இருந்தன. நிச்சயம் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெறுவேன். வழக்கமாக 5 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருக்கும். ஆனால் இம்முறை துணை பிரிவுகளாக 3 மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகளை இணைத்து 5 மதிப்பெண் கேள்வியாக கேட்டிருந்தனர்.
தாவரவியலில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளும் எளிதாக இருந்தது.அதிக மதிப்பெண்களை எதிர்பார்க்கிறேன்.
பி.சினேகா, ஜேசீஸ் மெட்ரிக்.,பள்ளி, சிவகாசி: தேர்வு எளிதாகவே இருந்தது. ஒரு மார்க் கேள்விகள் பரவாயில்லை. தாவரவியல் பாடத்தில் உள்ள ஒரு மார்க், 5 மார்க் உள்ளிட்ட அனைத்து கேள்விகளும் எளிதாகவே இருந்தது. விலங்கியல் பாடத்தில் ஒரே ஒரு 5 மார்க் கேள்வி 'கிரியேடிவாக' இருந்தாலும் எளிமையாகத்தான் இருந்தது. புரிந்து படித்திருந்தால் எளிதில் சென்டம் வாங்கி விடலாம். நேரம் போதுமானதாகவே இருந்தது. மொத்தத்தில் உயிரியல் எளிமையாக இருந்தது.
கிருஷ்ணமூர்த்தி, நவபாரத் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்:
உயிரியல், தாவரவியல் மூன்று மார்க் பிரிவு கட்டாய கேள்வி ஒன்றில்
கிரியேட்டிவாக கேட்டுள்ளனர். இது எதிர்பாராத ஒன்று. விலங்கியல் என்.லோகேஷ், கே.வி.எஸ்.,மேல்நிலை பள்ளி, விருதுநகர்: அனைத்து வினாக்களும் எளிதாக இருந்தன. நிச்சயம் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெறுவேன். வழக்கமாக 5 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருக்கும். ஆனால் இம்முறை துணை பிரிவுகளாக 3 மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகளை இணைத்து 5 மதிப்பெண் கேள்வியாக கேட்டிருந்தனர்.
தாவரவியலில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளும் எளிதாக இருந்தது.அதிக மதிப்பெண்களை எதிர்பார்க்கிறேன்.
பி.சினேகா, ஜேசீஸ் மெட்ரிக்.,பள்ளி, சிவகாசி: தேர்வு எளிதாகவே இருந்தது. ஒரு மார்க் கேள்விகள் பரவாயில்லை. தாவரவியல் பாடத்தில் உள்ள ஒரு மார்க், 5 மார்க் உள்ளிட்ட அனைத்து கேள்விகளும் எளிதாகவே இருந்தது. விலங்கியல் பாடத்தில் ஒரே ஒரு 5 மார்க் கேள்வி 'கிரியேடிவாக' இருந்தாலும் எளிமையாகத்தான் இருந்தது. புரிந்து படித்திருந்தால் எளிதில் சென்டம் வாங்கி விடலாம். நேரம் போதுமானதாகவே இருந்தது. மொத்தத்தில் உயிரியல் எளிமையாக இருந்தது.
பிரிவில் 1, 2 மார்க் கேள்விகளை யோசித்து எழுதும்படி இருந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு வினாத்தாளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு மிக எளிதாக இருந்தது.
கவிதா, உயிரியல் ஆசிரியர், ஷத்திரிய பெண்கள் மேல்நிலை பள்ளி, விருதுநகர்: முந்தைய ஆண்டுகளில் உள்ள கேள்வித்தாள்களில் இருந்தே பெரும்பான்மை கேள்விகள் கேட்கபட்டிருந்தன. வழக்கமாக உயிரியல் வினாத்தாளில் மறைமுக கேள்விகள் அதிகமாக இருக்கும். இம்முறை அனைத்து கேள்விகளுமே நேரடி கேள்விகளாக இருந்தன. தேர்வு முடிந்து வந்த மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமே காண முடிந்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...