டிடிஎட் படிக்கும் மாணவர்களுக்கான முதலாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு
எழுதிய மாணவர்களுக்கு 23ம் தேதி முதல் மதிப்பெண் சான்றுகள்
வினியோகிக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி
பள்ளிகளில் தொடக்க கல்வி பட்டயப் படிப்பு (டிடிஎட்) படித்து வரும் முதலாம்
ஆண்டு, இண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம்
தேர்வு நடந்தது.
அதற்கான மதிப்பெண் சான்றுகள் அந்தந்த பயிற்சி நிறுவனங்கள், தனித்
தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி
நிறுவனங்கள் மூலமாக 23ம் தேதி மதல் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக்
கொள்ளலாம். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான பட்டியத் தேர்வுகள் ஜூன் 14ம் தேதி
தொடங்கி 29ம் தேதி வரை நடக்கிறது. தேர்வில் தனித் தேர்வர்கள்
விண்ணப்பிக்கவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...