தேர்தல் திருவிழா!!
உலகத்தின் உன்னதங்களே
ஒப்பற்ற மாணிக்கங்களே
ஆறறிவை விரிவு செய்யும்
ஏழறிவாளர்களே
எதிர்காலத்தின் ஏணிகளே
இடைநிலை தொடங்கி
முதுநிலை வரை
முகிழ்த்திருக்கும் முத்துகளே
ஐந்தாண்டுக்கொரு முறை
தேர்தல் திருவிழாவின்
கதாநாயகர்களே
கரைபடியா கரங்களை கொண்டு
முறைப்படி தேர்தல் நடத்த
உம்மையன்றி
தொலைவென்று வருத்தம் வேண்டாம்
பேருந்தில்லை என பொருமல் வேண்டாம்
நல்ல உணவில்லை என கலங்க வேண்டாம்
வதைகள் சுமக்காமல் நாம் வாழவில்லையே
இன்று வரை...
அமைதியின் எடுத்துக்காட்டுகளே
எல்லாம் நாம் அறிந்தது தானென்றாலும்
பயிற்சிகளால் உரம் கூட்டப்பட்டு இருக்கிறோம்
இந்த நொடிமுதல் திரும்பும் நேரம் வரை
பதபதைப்பு பதற்றம் குறைந்து
மனதை லேசாக வைத்திருங்கள்..
நாம்
இணைந்தால் இருளே வெளிச்சம் தான்
தடைகளும் துச்சம் தான்
கடமை என வருகையில் வெளியே
காட்டவில்லை எனினும்
ஊரே நமை மெச்சும் தான்,
தேர்தல் பணியை சிறப்பாக்குவோம்
இருநாள் திருநாளென நினைத்து
நடைபோடுவோம்
அனைவரும் சங்கடமேதுமின்றி
சிறப்பாய் பணி முடித்து
இல்லம் திரும்ப
நமக்கு நாமே பிரார்த்தனை
செய்வோம்
வெறுப்பேதுமின்றி
பொறுப்புடன் பணியாற்றி
கடமையை செய்வோம்
நல்லன்புடன்
உங்களில்
ஒருவன்,,
சீ.தனஞ்செழியன்,
முதுகலைத் தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்.
வேலூர் மாவட்டம்