இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை
வலுத்திருக்கும் நிலையில், இதனை டவுன்லோடு செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து
அதிகரித்திருக்கிறது.
சீனாவை சேர்ந்த வீடியோ
பகிர்வு செயலியான டிக்டாக் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார்
8.86 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது
8.2 மடங்கு அதிகம் ஆகும். மொபைல் ஆப் சார்ந்த ஆய்வு நிறுவனமான சென்சார்
டவர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.
சீன
தொழில்நுட்ப நிறுவனமான பைட்-டேன்ஸ் டிக்டாக் செயலியை நிர்வகிக்கிறது.
முன்னதாக அமெரிக்காவில் குழந்தைகளின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்ததாக
டிக்டாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதைத்
தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் டிக்டாக் செயலியில் ஆபாச காட்சிகள்
ஊக்குவிக்கப்படுவதால், குழந்தைகளை மனதளவில் பாதித்து அவர்களின்
எதிர்காலத்தை சீரழிக்கும் என்பதால் செயலியை தடை செய்ய வேண்டும் என
உத்தரவிட்டது.
டிக்டாக் மீது பல்வேறு
குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல்
காலாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 188 கோடியாக இருக்கிறது என சென்சார் டவர்
வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை
விட 70 சதவிகிதம் அதிகம் ஆகும்.
டிக்டாக்
செயலியின் மொத்த டவுன்லோடுகளில் சுமார் 99 சதவிகிதம் கூகுள் பிளே ஸ்டோரில்
இருந்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில்
உலகளவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக் மூன்றாவது இடம்
பிடித்திருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர்
செயலிகள் இருக்கின்றன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...