
ஆசிரியர் தகுதித் தேர்வும், பி.எட்., இறுதியாண்டுத் தேர்வும் ஒரே நாளில் நடப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வும், பி.எட்., இறுதியாண்டுத் தேர்வும் ஜூன் 8-ல்
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது
சாத்தியமில்லை என்பதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவிருந்த பி.எட்., இறுதியாண்டுத் தேர்வு
ஜூன்13-ஆம் தேதி பிற்பகல் நடைபெறும் என உயர்கல்வித்துறை வியாழக்கிழமை
அறிவித்துள்ளது.
தேர்வு தேதியை மாற்ற மாணவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்தது.