சமஸ்கிருதம்கவியரசு கண்ணதாசன்
வெறுப்பினால் பிறமொழிகளைப் படிக்காது விட்டுவிடுகிறவன், அற்புதமான கருவூலங்களை இழந்துவிடுகின்றான் .
வடமொழி ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். தமிழைப் போலவே " தோன்றிய காலம் " தெரியாத அந்த மொழியில் எவ்வளவு அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன !
வடமொழியைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக , இப்போது "பகவத் கீதை" விளக்கவுரையைக் கவிதையிலும் உரைநடையிலும் எழுதியுள்ளேன் .
பஜகோவிந்தத்தில் வரும் முப்பத்தோரு பாடல்களையும் விவேக சிந்தாமணியைப் போல் சந்தக் கவிதைகளாக்கியுள்ளேன் .
இந்தச் 'சுயபுராணம்' எதற்கு என்றால் பல மொழி கற்பதில் உள்ள சுகத்தைச் சொல்லவே !
தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி இருக்கிறது. அவர்களுக்கு வடமொழிப் பயிற்சியும் இருக்குமானால், மற்றவர்களைத் திகைக்க வைக்கலாம் ! சபையில் நிமிர்ந்தது நிற்கலாம் !
முட்டாள்தனமாக 'வடமொழி செத்தமொழி' என்று எவனெவனோ சொன்னதைக் கேட்டு, நான் என் காலத்தை வீணாக்கி விட்டேன்.
இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும். ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வடமொழி காப்பாற்றும் !
தமிழின் பெயரால் கூப்பாடு போடுவது வெத்து அரசியல்.
தமிழ் நம் உயிர் ; அதுபோல் வடமொழி நமது ஆன்மா !








