வைத்திருக்கிறது. ஓர் ஆசிரியர் நினைத்தால் அந்தப்
பள்ளியை மிகச் சிறந்ததாக மாற்ற முடியும்; அங்கு படிக்கும் மாணவர்களின்
கல்வியை மேம்படுத்த முடியும் எனக் காட்டிய 'நிழல்' ஜோதிகாவைப்
பார்க்கும்போது, அப்படி நிஜத்தில் இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழாமல்
இருக்காது. ஏராளமான ரியல் ஜோதிகாக்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை.
தமிழகம் முழுக்க அரசுப் பள்ளிகளில் இப்படியான ஆசிரியை ஏராளமானோர்
இருக்கின்றனர். அவர்களில் சிலரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம்.
மகாலட்சுமி
மகாலட்சுமி
மகாலட்சுமி:
ஜவ்வாதுமலை, அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியை.
ராட்சசி'
படத்தின் ஜோதிகா கதாபாத்திரத்திரம் உருவாவதற்கான மூலமே இவர்தான் என்பதால்,
படத்தில் நன்றி தெரிவித்திருப்பார்கள். இவர் பணிபுரியும் பள்ளியில்
பெரும்பான்மையோர் முதல் தலைமுறையாகக் கல்விபெறும் மலைவாழ் மக்களின்
குழந்தைகள். எனவே, வெறுமனே பாடங்களை நடத்தும் ஆசிரியராக மட்டுமே அங்கு
பணிபுரிய முடியாது. அந்தச் சவாலை ஏற்ற மகாலட்சுமி, குழந்தைகளுக்குக் கல்வி
அவசியம் என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்தும் வேலையை முதலில் செய்தார்.
அடுத்து, அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு முடிவெட்டுவது முதல் உடைகளைச்
சீர்செய்வது வரை அனைத்தும் தம் பொறுப்பு என முழுமனத்தோடு ஏற்றுக்கொண்டார்.
காட்டு வேலைகளுக்காகக் குழந்தைகளை அழைத்துச்செல்லப்பட்ட குழந்தைகளுக்குக்
கல்வி அளிப்பது முதல், நடக்கவிருந்த குழந்தைத் திருமணங்களை நிறுத்தி,
அவர்களைப் பள்ளிக்கு அழைத்துவந்தது வரை மகாலட்சுமியின் பணி மகத்தானது.
பள்ளிப் படிப்பு முடிந்தாலும், அடுத்து கல்வி கற்பதற்கு வாய்ப்பும்
ஏற்படுத்திக்கொடுப்பதில் வெளிப்படுகிறது இவரின் எதிர்பார்ப்பற்ற
அர்ப்பணிப்பு.
சுடரொளிபெண் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர்.,
சுடரொளி
சுடரொளி:
திருவள்ளூர் மாவட்டம் கரிக்கலவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின்
ஆசிரியை சுடரொளி. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பெற்றோர்களின்
பிள்ளைகள் படிக்கும் பள்ளி. குறிப்பாக, படிப்பைப் பாதியில் நிறுத்த
நினைக்கும் பெற்றோர்களே அதிகம். அவர்களின் மனத்தை மாற்றியும், பெண்
குழந்தைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம்
அளிப்பவர். பருவம் எய்தும் வயதுடைய பெண்கள் படிக்கும் நடுநிலைப் பள்ளி
என்பதால், மாதவிடாய் குறித்தும் நாப்கின் பயன்படுத்துவது குறித்தும்
மாணவர்களைத் தயார்செய்வது உட்பட, பல செயல்களை முன்னெடுப்பவர். எதையும் தன்
பள்ளிக்கானதாக மட்டும் பார்க்காமல், தமிழகம் முழுவதுமுள்ள மாணவர்களுக்குச்
சேரும் விதமாகப் பொதுவெளியில் குரல்கொடுப்பவர்.
ஹேம்குமாரிவேறெந்த யோசனையுமின்றி, அந்தத் தொகையுடன் தன் சம்பளப் பணத்தையும்
சேர்ந்து 90,000 ரூபாய்க்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைத்துவிட்டார்.
ஹேம்குமாரி
ஹேம்குமாரி:
எளிய முறையில் ஆங்கிலம், சிறந்த வகுப்பறையுமாக மாணவர்கள் கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார், அன்னபூர்ணா.
அன்னபூர்ணா
அன்னபூர்ணா:
கணக்கு டீச்சர் என்பதன் ரோல்மாடலாகத் திகழ்கிறார், ரூபி கேத்தரின் தெரசா
ரூபி கேத்தரின் தெரசா
ரூபி கேத்தரின் தெரசா:
தன்னிடம் படிக்கும் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் அற்புத ஆசிரியர்களில் அகஸ்லியா சுகந்திக்கு தனி இடம் உண்டு.
அகஸ்லியா சுகந்தி
அகஸிலியா சுகந்தி:
விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் ஜூனியரில், சென்ற சீசனில் பட்டத்தைத்
தட்டிச் சென்றவர் பிரித்திகா. கிராமத்து மணம் கமழும் பிரித்திகாவின் குரல்,
உலகம் எங்கும் உள்ள இசை ரசிகர்களை வசிகரித்தது. ஆனால் பிரித்திகா,
திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.
இவரின் திறமையை உலகமறியச் செய்ததில் இவர் படித்த அரசுப் பள்ளியின் ஆசிரியை
அகஸிலியா சுகந்திக்குப் பெரும்பங்கு இருக்கிறது. தியானபுரம் அரசுப்
பள்ளியில் பிரித்திகா படித்தபோது, பிரேயரில் அவர் பாடிய பாட்டைக் கேட்டு,
அவரின் திறமையை அடையாளம் கண்டவர். அதை மெருகேற்றவும் தொலைக்காட்சியில்
இடம்பெறவும் உறுதுணையாக நின்றவர். தன்னிடம் படிக்கும் மாணவர்களின் திறனை
வெளிக்கொண்டுவரும் அற்புத ஆசிரியர்களில் அகஸ்லியா சுகந்திக்குத் தனித்த
இடம் உண்டு.
சு. தமிழ்ச்செல்வி:
கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம் கோ.ஆதனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்
பள்ளி ஆசிரியை. இந்தப் பள்ளி, இவர் பணிக்குச் சென்றபோது, வகுப்பறை மற்றும்
கழிவறைகளுக்கு கதவு, தண்ணீர் வசதி என எதுவும் இல்லை. இவர் பெரும் முயற்சி
எடுத்து ஒவ்வொன்றாக நிறைவேற்றினார். இந்தப் பள்ளி ஓர் ஏரியின் மிக அருகில்
இருக்கிறது. சாலையிலிருந்து பள்ளிக்கு வரும் வழி என்பது குறுகலானது.
மழைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். அந்தப் பாதை, சேறும் சகதியுமாகிவிடும்.
அதைக் கடந்து மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும்போது, அவர்களின் சீருடையின்
நிறமே மாறியிருக்கும். கால்களில் சேறு அப்பியிருக்கும். இதைச் சரிசெய்ய
பலரிடம் உதவிக்கேட்டு, ஜேசிபி கொண்டு அதைச் சரிசெய்தார். இதற்குப் பல
எதிர்ப்புகளும் வந்தன. அவற்றைச் சரிசெய்வதில் விடாப்பிடியாக இருந்தார்.
இவர், தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அதனால்,
அதன்மூலம் கிடைக்கும் நட்புகளின் உதவிகளையும் பள்ளிக்காகவே
பயன்படுத்திவருபவர். மாணவர்களின் நேசத்துக்கு உரிய ஆசிரியராக வலம்வருகிறார்
தமிழ்ச்செல்வி.
ராஜ ராஜேஸ்வரி:
திருச்சி, பீம்நகர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை இவர்.
மாநகராட்சியின் மையப் பகுதியில் இருக்கும் இந்தப் பள்ளி, சில ஆண்டுகளுக்கு
முன் மூடப்படுவதாக இருந்தது என்றால் நம்ப முடிகிறதா... அந்த நிலையை மாற்றி
அமைத்த ஆசிரியை ராஜேஸ்வரி. 2009-ம் ஆண்டில் இந்தப் பள்ளியில் படித்த
மாணவர்களின் எண்ணிக்கை 44 தாம். 2018 -ம் ஆண்டில் 240-க்கும் அதிகம்
என்றால், இந்த ஆசிரியையின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அதில் இருக்கின்றன.
சுற்றிலும் தனியார் பள்ளிகள் வசீகரமாய், பெற்றோர்களை
ஈர்த்துக்கொண்டிருக்கும் சூழலில், நம் பள்ளியின் கட்டமைப்பில் மாற்றம்
கொண்டுவந்தால் மட்டுமே மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், தன்
சொந்தச் செலவில் சுமார் 5 லட்சம் ரூபாய்க்கு கணினி, சுவருக்கு வண்ணம்
பூசுதல், கழிவறை அமைத்தல் பணிகளை மேற்கொண்டார். அதன் விளைவு, பெற்றோர்கள்
பள்ளியை நோக்கிப் படையெடுத்தனர். மூடவிருந்த பள்ளியைச் சீராக்கி,
துடிப்புடன் இயங்கவைத்த சிறப்பு மிகு ஆசிரியை ராஜ ராஜேஸ்வரி.
மாணவர்களின் முகம் பார்த்தே பசியறியும் அன்னையாகி விட்டார் ஆசிரியை கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி:
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மிகச் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களின்
எண்ணிக்கை மிக அதிகம். அவர்களில் சிலரே இவர்கள். இப்பட்டியலில் அடங்காத
இருவர் பற்றிய குறிப்பு இது.