இரவு நேரங்களில் நீங்கள் வாகனம் ஓட்டிச் செல்லும்போது, உங்கள் ஸ்கிரீன் கண்ணாடியில் முட்டைகள் வீசப்பட்டால், உடனே சரிபார்க்கும் எண்ணத்தில், காரை நிறுத்த வேண்டாம். கார் கண்ணாடியில் வைப்பரையும் இயக்க வேண்டாம். தண்ணீரையும் தெளிக்க வேண்டாம். ஏனென்றால், முட்டை தண்ணீரில் கலந்து, பால் போன்று ஆகிவிடும். அது உங்களை வெளியே பார்க்க முடியாதவாறு பார்வையைத் தடுத்துவிடும். நீங்கள் சாலையின் ஓரத்தில் நின்று, இந்தக் குற்றவாளிகளுக்கு பலியாகிவிட வேண்டாம். இது திருட்டுக் கும்பல்கள் பயன்படுத்தும் புதிய வழிப்பறித் திட்ட முறையாகும்.
மேலும், நமது கருத்து:
புதிய ஊர்களில், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் அறியாத நபர்கள் கையை நீட்டி நிறுத்தினாலும், காரை நிறுத்துவது என்பது ஆபத்தானதாகும்.
---நன்றி,







