தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக
உள்ள 950 தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு அரசு
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக செய்தி தொடர்பு செயலர் மு.முருகேசன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 500 தலைமையாசிரியர் பணியிடங்களும், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 450 தலைமையாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. மாவட்ட கல்வி அலுவலருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றால், மேலும் 50-க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடம் காலியாகும் நிலை உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக செய்தி தொடர்பு செயலர் மு.முருகேசன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 500 தலைமையாசிரியர் பணியிடங்களும், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 450 தலைமையாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. மாவட்ட கல்வி அலுவலருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றால், மேலும் 50-க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடம் காலியாகும் நிலை உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு உடனடியாக காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பவும், பதவி உயர்வு கலந்தாய்வை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்திடும் வகையிலும், கலந்தாய்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.