பிளஸ் 2 வகுப்புக்கு புதியதாக அச்சிட்டு
வழங்கப்பட்டுள்ள இயற்பியல் பாடங்கள் தொடர்பாக மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள்
11 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கான கணக்கு,
இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட இரண்டாம் தொகுதி பாடப்புத்தகங்கள் கடந்த
வாரம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த இரண்டாம் தொகுதியில் இடம்
பெற்றுள்ள பாடங்களை நடத்துவது குறித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு
தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் மாவட்ட வாரியாக
கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களில் தலா 3 முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் வீதம் 288 பேர் பயிற்சி பெறுகின்றனர்.
இந்த பயற்சி பெறும் ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மற்ற
ஆசிரியர்களுக்கு 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை பயிற்சி அளிப்பார்கள். இதன்
மூலம் 11 ஆயிரத்து 145 ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். இதையடுத்து, மத்திய
மனித வள மேம்பாட்டுத்துறை(எம்எச்ஆர்டி), தேசிய கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனம்(என்சிஇஆர்டி), தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும்
நிர்வாக நிறுவனம்(என்ஐஇபிஏ) ஆகியவை இணைந்து உருவாக்கப்பட்ட, தேசிய அளவிலான
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் மேம்பாட்டுக்கான
பயிற்சியும் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது. இதில் 1ம் வகுப்பு முதல் 8ம்
வகுப்புகளை கையாளும் 335 உயர் தொடக்க நிலை, 459 தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு
5 நாட்கள் ஒருங்கிணைந்த பயிற்சி 5கட்டங்களாக நவம்பர் 15ம் தேதி வரை
நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் ஜார்ஜ் டவுன், ராயபுரம், பெரியமேடு,
பெரம்பூர், ஆகிய மண்டலங்களில் நடக்கிறது.
இந்த பயிற்சியில் என்சிஎப் 2009 தேசிய கல்விக் கொள்கையின் படி
உருவாக்கப்பட்ட கற்றல் விளைவுகள், கலைத்திட்ட எதிர்பார்ப்புகள், கற்றல்
செயல்முறைகள் ஆகியவற்றுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்த உதவும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி
செயல்படத் தேவையான திறன்கள், அறிவு, பொறுப்புணர்வு போன்றவற்றை பெறும்
வகையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை வடிவமைத்து செயல்படுத்த உதவும்
கருத்துகள் இந்த பயிற்சியின் மூலம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...