ஒருசிலர் எப்போதும் சோர்வாகவே
காணப்படுவார்கள். அடிக்கடி தூங்கவும் விரும்புவார்கள். அப்படி நாள்
முழுவதும் சோர்வுடன் காட்சி அளிப்பது பல்வேறு உடல்நல குறைபாடுகளை
தோற்றுவிக்கும். ஒருசில அறிகுறிகளை கொண்டு அந்த சோர்வு எத்தகையது என்பதை
கண்டறிந்து அதனை போக்கிவிடலாம்.
* சிலர் எதையும் ஈடுபாட்டோடு செய்யும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். தான்
பலவீனமாக இருப்பதாக கருதுவார்கள். உடலில் இரும்பு சத்து குறைவாக இருப்பது
இதற்கு காரணம். இரும்பு சத்து ஹிமோகுளோபினின் முக்கிய அங்கமாக இருப்பதால்
அது குறையும்போது உடல் பலவீனமடையும். உடலில் உள்ள செல்களுக்கு போதுமான அளவு
ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றாலும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு
ஏற்படும். பச்சை இலை காய்கறிகள், இறைச்சி, பயறு வகைகள், நீர்ச்சத்து கொண்ட
பழங்கள், நட்ஸ் வகைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் சோர்வை விரட்டலாம்.
* பகல் வேளையில் சோம்பலாக இருப்பதாக உணர்ந்தால் நிறைய பேர் காபி
பருகுவார்கள். அது உடனடியாக சோம்பலை போக்கி உற்சாகத்தை தரும். ஆனால் அது
சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கும். மேலும் அதிக அளவு சர்க்கரை கலந்த
பானங்களை பருகும்போது அவை ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கும்.
அதனால் உடனடியாக புத்துணர்வு கிடைக்கும். ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும்
சோர்வு எட்டிப்பார்க்க தொடங்கிவிடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீரற்ற
நிலையில் இருப்பது நல்லதல்ல. இதனை தவிர்க்க சீரான இடைவெளியில் சாப்பிட
வேண்டும். நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் கொண்ட உணவு வகைகளை
தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
* சிலருக்கு மனம் நிம்மதி இன்றி தவிக்கும். நாள் முழுவதும் காபின் கலந்த
பானங்களை பருகுபவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படும். காபின் அதிகமாக
உட்கொள்ளும்போது அது உடலையும், மனதையும் பாதிக்கும். காபி அதிகம் பருகுவதை
தவிர்த்து மூலிகை டீ வகைகளை பருகி வரலாம்.
* கவனச்சிதறல், ஆர்வமின்மை போன்ற காரணங்களாலும் சோர்வு எட்டிப்பார்க்கும்.
அது அன்றாட செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கும். அப்போது மூளையின்
செயல்பாடும் குறையும். அதனால் சோர்வு உண்டாகும். அதற்கு வைட்டமின் பி
குறைபாடு காரணமாக இருக்கலாம். மது அருந்துவதாலும் இத்தகைய பாதிப்பு நேரும்.
புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மதுப்பழக்கத்தை
கைவிடவேண்டும்.
* காலை உணவை தவறாமல் உட்கொள்ள வேண்டும். சாப்பிடாமல் நீண்ட நேரம் வெறும்
வயிற்றுடன் இருப்பது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். மந்தமான உணர்வு
ஏற்படும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...