'' ஆங்கில புத்தாண்டு உறுதிமொழி..(2020)
புத்தாண்டு வந்தால் உறுதிமொழிகள் இல்லாமலா? ஒவ்வொரு புத்தாண்டும் நாமும் வகை, வகையான உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
அதில் எத்தனை உறுதிமொழிகளை நிறை வேற்றினோம் கிறோம் என்பது நமக்கு மட்டும்தான் தெரியும்.
சரி, போன வருடம் எடுத்துக் கொண்ட உறுதி மொழி களை விடுங்கள்.
இந்த புத்தாண்டில் சில உறுதி மொழிகளை எடுப்போம். முடிந்தவரை அதை நிறை வேற்ற முயல்வோம.
*முகநூல்,, வாட்சப்,, ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள்.
*நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள்,. தினமும் நடைபயிற்சி மேற்க் கொள்ளுங்கள்..புத்தாண்டு வந்தால் உறுதிமொழிகள் இல்லாமலா? ஒவ்வொரு புத்தாண்டும் நாமும் வகை, வகையான உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
அதில் எத்தனை உறுதிமொழிகளை நிறை வேற்றினோம் கிறோம் என்பது நமக்கு மட்டும்தான் தெரியும்.
சரி, போன வருடம் எடுத்துக் கொண்ட உறுதி மொழி களை விடுங்கள்.
இந்த புத்தாண்டில் சில உறுதி மொழிகளை எடுப்போம். முடிந்தவரை அதை நிறை வேற்ற முயல்வோம.
*முகநூல்,, வாட்சப்,, ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள்.
*.நாள் ஒன்றிற்கு பத்து நிமிடம் எதுவுமே செய்யாமல் டி வி அணைக்கப்பட்டு எதை பற்றியும் நினைக்காமல் அமைதியாய் இருக்க முயலுங்கள்.
*நம் வீட்டை விட பக்கத்து வீடு பெரியதாகத்தான் இருக்கும், நம் குழந்தைகளை விட மற்றவர்கள் நன்றாகத்தான் படிக்கும்,
*நம்மை விட மற்றவரிடம் அதிகம் வசதி இருக்கத்தான் செய்யும். ஏற்ற தாழ்வுகள் இல்லாவிடில் நமக்கு வாழ்க்கையில் கற்று கொள்ள ஒன்றும் இருக்காது என்று உணருங்கள். ஆக, இதற்கெல்லாம் கவலைப் படாதீர்கள்.
* ஐந்து வயதிற்குட்பட்ட நம் வீட்டு குழந்தையோ,, பக்கத்து குழந்தையோ,, பத்து நிமிடமாவது முடிந்தால் நாள் ஒன்றுக்கு அதனுடன் உரையாடுங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள்
* உங்களுக்கு நன்கு தெரிந்த செய்திகளை மற்றவர் களுடன் பகிர முயற்சியுங்கள்..யாரையும் யாரும் திருத்த முடியாது என்று அறியுங்கள்.
* பணமோ, உடல்நிலையோ, எதிர்காலமோ எதை நினைத்தும் பயப்படாதீர்கள். பயத்துடனேயே வாழ்ந்து மடிவதில் அர்த்தம் இல்லை. எப்படி கவலை இன்றி பிறந்தோமோ, அதே போல் கவலையின்றி இறக்க வேண்டும்.
*.உங்களால் உழைத்து நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்றால் செய்யுங்கள், அது ஒன்றும் தவறு இல்லை. ஆனால் நேர் வழியில் சம்பாதியுங்கள்.
*வாரத்திற்கொருமுறை அரை மணியாவது தாய் தந்தையிடரிடம் தனிமையில் அன்போடு உரை யாடுங்கள்.
அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில் சும்மாவாவது மகிச்சியாக உரையாடிவிட்டு வாருங்கள்..
•வீண் செலவைக் குறைப்போம். நமக்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படுகிறதோ அதை மட்டும் வாங்குங்கள். தேவையில்லாமல் கண்ணில் படுவதை எல்லாம் வாங்கிவிட்டு பணமில்லாமல் கையைப் பிசைய வேண்டாம்.
* இனிப்புகளை தவிர்க்க முயலுங்கள். மது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்யுங்கள்..
*எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள். சிரித்து வாழுங்கள்..
நீங்க இதை எல்லாம் செய்வீர்களா? என்று என்னை கேட்காதீர்கள்,