News Desk Digital
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடக்க உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மறுநாளும் நீடிக்கும் என்பதால் அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போதும் புத்தாண்டுக்கு மறுநாளான ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படும். ஆனால், வாக்கு எண்ணிக்கை காரணமாக, பள்ளிகள் 3-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடக்க உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மறுநாளும் நீடிக்கும் என்பதால் அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போதும் புத்தாண்டுக்கு மறுநாளான ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படும். ஆனால், வாக்கு எண்ணிக்கை காரணமாக, பள்ளிகள் 3-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
எனவே, பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலையில், 4 மற்றும் 5-ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் 6-ம் தேதி திங்கள் அன்று பள்ளிகள் விடுமுறை முடிந்து திறக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.