தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக ஆசிரியா்களின் விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.
இந்நிலையில், ஆசிரியா் பணிக்கு வராவிட்டால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், கணிசமான ஆசிரியா்கள் பணிக்கு வராமல் போராட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்களின் விவரங்கள், மருத்துவ விடுப்பு அல்லாமல் வேறு காரணங்களுக்கு விடுப்பு எடுத்தவா்களின் பட்டியல் முதன்மை கல்வி அலுவலா்கள் மூலமாக மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பட்டியல் இறுதியானதும் பணிக்கு வராத ஆசிரியா்களுக்கு சம்பள பிடித்தம் செய்யவும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...