மின்வாரியக் கணக்கீட்டாளர் தேர்வில் 100 கேள்விகளில் 80 கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே கேட்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
கணக்கீட்டாளர் பதவிக்கான 1,300 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
மின்வாரியப் பணி என்பதால் அளவீட்டுக் கருவி மூலம் கணக்கீடு செய்வதற்கும் மற்றும் மிதிவண்டி ஓட்டுவதற்கும் தெரிந்திருத்தல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மின்வாரிய கணக்கீட்டாளர் தேர்வில் 100 கேள்விகளில் 80 கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே கேட்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது 100-க்கு 20 கேள்விகள் மட்டுமே தமிழில் இருக்கும். பட்டப்படிப்பே இப்பணிக்கான அடிப்படைத் தகுதி என்பதால் கேள்விகளில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 100 கேள்விகளும் தமிழில் மட்டுமே கேட்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆங்கிலத்தில் பெரும்பாலான கேள்விகள் கேட்கப்படுவது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
www.tangedco.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நேற்றே விண்ணப்பம் செய்வதற்கான தேதி முடிந்துவிட்டது. தேர்வு நடைபெறும் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...