ராத்திரியில திடீர்னு காய்ச்சல் வந்துடுச்சா?... உடனே இந்த 5 விஷயத்த பண்ணுங்க... எங்க பாட்டி சொன்னது...
பருவ
கால மாற்றங்களால் நம்முடைய உடலிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதிலும்
குறிப்பாக குளிர்காலம் தொடங்கிவிட்டால் திடீர் திடீரென்று காய்ச்சல வரும்,
சனி பிடிக்கும். பகலில் இதுபோன்ற பிரச்சினை வரும்போது உடனே மருத்துவரை அணுக
முடியும். ஆனா்ல இரவு நேரத்தில் திடீரென்று காய்ச்சல் வந்துவிட்டால், என்ன
செய்வீர்கள். இதுபோன்று திடீரென வரும் காய்ச்சலுக்கு எங்க பாட்டி சொன்ன
சூப்பரான 5 வைத்தியங்களைத் தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். நீங்களும்
ட்ரை பண்ணிப் பாருங்க.
திடீர் காய்ச்சல்
வெப்பநிலையில்
லேசான சரிவு மற்றும் குளிர்ந்த காற்று ஆகிய இரண்டுமே குளிர்காலம்
வருவதற்கான ஒரு அறிகுறி. இந்த காலத்தில் நாம் உடலின் மீது அடர்த்தியான ஆடை
உடுத்தி கொள்வது நல்லது. ஆனால் இந்த மாற்றம் காலம் பெரும்பாலும் சளி
மற்றும் காய்ச்சலை பரப்பும். பருவ கால மாற்றங்களால் நம்முடைய உடலிலும்
நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதிலும் குறிப்பாக குளிர்காலம் தொடங்கிவிட்டால்
திடீர் திடீரென்று காய்ச்சல வரும், சனி பிடிக்கும். பகலில் இதுபோன்ற
பிரச்சினை வரும்போது உடனே மருத்துவரை அணுக முடியும். ஆனா்ல இரவு நேரத்தில்
திடீரென்று காய்ச்சல் வந்துவிட்டால், என்ன செய்வீர்கள். இதுபோன்ற இக்கட்டான
சூழ்நிலையில் எங்கள் பாட்டில் இந்த 5 சிம்பிளான வழிமுறைகளை தான் செய்வார்.
காய்ச்சல் பறந்துவிடும்.
மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் மற்றும்
தலைவலி போன்ற சளியின் பொதுவான அறிகுறிகள் நம்மை நிம்மதியக இருக்க விடாது.
சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்க மிகவும் பரிந்துரைக்கும் வழி மருந்துகளை
உட்கொள்வது தான். ஆனால், கடுமையான சளி மற்றும் காய்ச்சலிலிருந்து விடுபட
சில இயற்கையான அசாதாரண வழிகள் உள்ளன.
புரதத்தை உட்கொள்ளுங்கள்
சரியான
உணவை உட்கொண்டு வருவது எந்தவொரு உடல்நலப் பிரச்சினையிலிருந்தும் விடுபட
உதவும். அதில் குளிர் ஒரு விதிவிலக்கு அல்ல. நீங்கள் உண்ணும் உணவு உங்களை
ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் கொஞ்சம்
சோர்வாக உணர ஆரம்பித்தவுடன், உங்கள் புரத உட்கொள்ளலை அதிகரிக்கவும்.
புரதத்துடன்
நிரம்பிய ஒரு ஆரோக்கியமான உணவு உங்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை
வழங்கும் மற்றும் கடுமையான சளியை ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளைத்
அண்டவிடாமல் தடுக்கும். இது தவிர, சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி போன்ற
வைட்டமின் சி நிரம்பிய உணவுப் பொருட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்க உதவும்.
மசாஜ்
ஒரு மென்மையான மசாஜ் கூட சளி
பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்க உதவும். ஏனெனில், மசாஜ் பெறுவது உங்கள்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதனால் சளி மற்றும் காய்ச்சலிலிருந்து
பாதுகாப்பாக இருக்க உதவும். அது மட்டுமல்ல, மசாஜ் செய்வதால் நீங்கள்
நிம்மதியாக உணர்வீர்கள். சளியின் ஆரம்ப கட்டத்தில் மசாஜ் செய்வது நன்மை
பயக்கும். ஆனால் நீங்கள் ஏற்கனவே சளியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தால்,
மசாஜ் ஒரு சிறந்த தேர்வாக இருக்காது.
ஈரமான சாக்ஸ் அணியுங்கள்
சளியால்
பாதிக்கப்படும்போது ஈரமான சாக்ஸ் அணிவது உண்மையில் உதவும். ஈரமாக
இருந்தால் சளி அதிகமாகும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனா்ல உடல் வெப்பம்
அதிகரித்தால் தான் சளி பிடிக்கும். ஈர சக்ஸ் அணிந்தால் உடல் வெப்பம்
தணியும். படுக்கைக்குச் செல்லும்போது ஈரமான சாக்ஸ் அணிவது நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கும் நீர் சிகிச்சை மருத்துவமுறை போன்ற விளைவை
ஏற்படுத்தும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு ஜோடி சாக்ஸை
குளிர்ந்த நீரில் ஊறவைத்து, அதைப் போட்டு, பின்னர் அதன்மேல் ஒரு கம்பளி
சாக்ஸை அணியவும். இவ்வாறு மறுநாள் காலையில் உங்கள் உடல் நிலையில்
முன்னேற்றம் காண்பீர்கள்.
பச்சை வெங்காயம் சாப்பிடவும்
பச்சை
வெங்காயம் சளி மற்றும் காய்ச்சலுடன் போராடஉதவுவதாக கருதப்படுகிறது. இதற்கு
இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, பச்சை வெங்காயம் இயற்கையாகவே
ஆண்டிமைக்ரோபையல் பண்பை கொண்டது. இரண்டாவதாக அவற்றில் ஏராளமான சல்பர்
உள்ளது. இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நன்மை பயக்கும். சிறிது
வெங்காயத்தை வெட்டி ஒரு டம்ளர் தண்ணீரில் ஆறு முதல் எட்டு மணி நேரம்
ஊறவைத்து பின்னர் குடிக்கவும்.
தேநீர் எடுத்துக்கொள்ளுங்கள்
உங்களுக்கு
தொண்டை புண் இருக்கும்போது ஒரு கப் சூடான தேநீர் பருகுவது சிறந்த
தேர்வாகும். பெரும்பாலான மக்கள் இஞ்சி தேநீரைத் தேர்வு செய்கிறார்கள்,
ஆனால் கடுமையான சளியை வேகமாக போக்க க்ரீன் டீ, பிளாக் டீ, அல்லது வெள்ளை
தேநீர்(வைட் டீ) ஒரு சிறந்த தேர்வாகும். க்ரீன், பிளாக், அல்லது வெள்ளை
தேநீரில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை உங்கள் உடலுக்கு சளி
மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகின்றன. நீங்கள்
விருப்பப்பட்டால், உங்கள் தேநீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.