ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு டிராக்டர்
உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை வாடகையின்றி 90 நாட்களுக்கு வழங்க அரசு
முடிவு செய்துள்ளது.
வாடகையின்றி வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகளின் நலன் கருதி விவசாயப் பொருள்கள் கொள்முதல், விதை மற்றும் உர விற்பனை நிலையங்கள் இயங்குதல், விவசாய இயந்திரங்களின் புழக்கம் போன்ற நடவடிக்கைகளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வாடகையின்றி வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகளின் நலன் கருதி விவசாயப் பொருள்கள் கொள்முதல், விதை மற்றும் உர விற்பனை நிலையங்கள் இயங்குதல், விவசாய இயந்திரங்களின் புழக்கம் போன்ற நடவடிக்கைகளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
தமிழக அரசு மற்றும் டாபே நிறுவனத்தின் ஜெ பாா்ம் ஆகியவை இணைந்து
டிராக்டா்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை, சிறு மற்றும் குறு
விவசாயிகளுக்கு அனைத்து விதமான விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக 90
நாட்களுக்கு வாடகையின்றி இலவசமாக உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையில் வழங்க
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாடகையின்றி வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும்
விவசாயிகள் உழவன் செயலியில் உள்ள வேளாண் இயந்திர வாடகை சேவையின் மூலம்
தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் தேவைப்படும் தேதி, நேரம்
ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், டாபே நிறுவனத்தின் ஜெ பாா்ம் சேவை மையத்தை 18004200100 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்யலாம்.
இந்த
வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தூத்துக்குடி
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் தெரிவித்தார்.
மேலும், டாபே நிறுவனத்தின் ஜெ பாா்ம் சேவை மையத்தை 18004200100 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...