ஊரடங்கால் நோயாளிகள் தவிப்பு- ஆன்லைனில் கிளினிக் நடத்தும் டாக்டர்கள் குழு : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 23 April 2020

ஊரடங்கால் நோயாளிகள் தவிப்பு- ஆன்லைனில் கிளினிக் நடத்தும் டாக்டர்கள் குழு :

ஊரடங்கால் நோயாளிகள் தவிப்பு- ஆன்லைனில் கிளினிக் நடத்தும் டாக்டர்கள் குழு
ஸ்டெதஸ்கோப்
சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் அறிவுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் சாதாரண உடல்நல பிரச்சினைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில் டாக்டர்கள் ஆன்லைன் கிளினிக் ஒன்றை ஆரம்பித்து பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். இந்த ஆன்லைன் மருத்துவ கிளினிக்கை நாடு முழுவதும் 180 டாக்டர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர்.

நோயாளி அல்லது அவர்களது குடும்பத்தினர் 98408 76460 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்ப வேண்டும். பின்னர் நோயாளியின் பெயர், வயது, பாலினம், உடல்நலப்பிரச்சினை, முன்பே இருக்கும் நோய், தற்போது பயன்படுத்தும் மருந்துகள் ஆகிய விவரங்களை கேட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாதவர்கள் ஆடியோவாக தகவல்களை அனுப்பலாம். அவை அத்தியாவசியம் மற்றும் அத்தியாவசியமற்ற தேவை என மதிப்பிட்ட பிறகு அவை மருத்துவர்களுக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுக்களில் அனுப்பப்படும்.

பின்னர் சம்பந்தப்பட்ட நோய்க்கான நிபுணர் அல்லது டாக்டர் நோயாளிகளிடம் தொடர்பு கொண்டு பேசுவார்.

இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் சிலர் வெளிநாட்டில் இருந்தும் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஒரு நோயாளிகளுக்கு 10 நிமிடம் முதல் 3 மணி நேரம் வரை ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இந்த ஆன்லைன் சிறப்பு டாக்டர்கள் குழு நரம்பியல், அறுவை சிகிச்சை, நீரிழிவு நோய், இதயவியல், குழந்தை மருத்துவம், எலும்பியல், தோல் நோய் உள்ளிட்டவைகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

பெரும்பாலும் நோயாளிகளிடம் இருந்து குழந்தை மருத்துவம், நீரிழிவு நோய், தோல் நோய் மற்றும் வயிற்று வலி போன்ற பொது ஆலோசனை தொடர்பாகவே அதிகமாக ஆலோசனை கேட்கப்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

மருந்துகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு தற்போது ஊரடங்கால் அவர்கள் பயன்படுத்தும் மருந்துகள் கிடைக்காததால் அதற்கு பதில் வேறு எந்த மருந்தை பயன்படுத்தலாம் என்று கேட்கிறார்கள்.

அவசர நிலை ஏற்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறுகிறோம். நாங்கள் ஆலோசனை மற்றும் முதன்மை பராமரிப்பு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H