தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் சி.விஜயராஜ்குமார் அனைத்து
மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய
சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாற்றுத் திறனாளிகள் பலர், அவர்களின் தினசரி செயல்பாட்டுக்கு உதவும்
நபர்களை ஊரடங்கு உத்தரவினால் வரவழைக்க முடியவில்லை என்பது குறித்து அரசின்
கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீடுகளுக்கு வந்து அவர்கள் தெரபி போன்ற
மருத்துவ உதவிகளை செய்து வந்தவர்களாகும்.எனவே மாற்றுத் திறனாளிகளுக்கு
உதவும் வகையில் தெரபி போன்ற மருத்துவ உதவிகளைச் செய்யும் ‘கேர் கிவ்வர்’
என்பவர்களுக்கு போக்குவரத்துக்கான பாஸ்களை வழங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.