பி.சி.எஸ்., படிப்பு, பி.காம்., பட்டத்திற்கு இணையானது என, சான்று வழங்க
கோரிய வழக்கில், மதுரை காமராஜ் பல்கலை பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரை
கிளை உத்தரவிட்டது.
மதுரை, திருநகர் கலைவாணி தாக்கல் செய்த மனு:
மதுரை தெற்கு மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில், கணக்கு உதவியாளராக பணிபுரிகிறேன். என் கணவர், 2015ல் இறந்தார். அலுவலகத்தில் கணக்கு மேற்பார்வையாளர் பணி, காலியாக உள்ளது.அப்பதவிக்கு, பி.காம்., அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். நான், பி.சி.எஸ்., - பேச்சிலர் ஆப் கார்ப்பரேட் செகரட்ரிஷிப் - மூன்றாண்டு பட்டப் படிப்பை, மதுரை காமராஜ் பல்கலை கீழ் உள்ள கல்லுாரியில் படித்துள்ளேன். பி.சி.எஸ்., படிப்பு, பி.காம்., படிப்பிற்கு இணையானது என, 2018ல், தமிழக உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.அரசாணைப்படி, பி.சி.எஸ்., படிப்பு, பி.காம்., படிப்பிற்கு இணையானது என, சான்று வழங்க காமராஜ் பல்கலைக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.நீதிபதி, ஜெ.நிஷா பானு, ''மனுவை, மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என்றார்.
மதுரை, திருநகர் கலைவாணி தாக்கல் செய்த மனு:
மதுரை தெற்கு மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில், கணக்கு உதவியாளராக பணிபுரிகிறேன். என் கணவர், 2015ல் இறந்தார். அலுவலகத்தில் கணக்கு மேற்பார்வையாளர் பணி, காலியாக உள்ளது.அப்பதவிக்கு, பி.காம்., அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். நான், பி.சி.எஸ்., - பேச்சிலர் ஆப் கார்ப்பரேட் செகரட்ரிஷிப் - மூன்றாண்டு பட்டப் படிப்பை, மதுரை காமராஜ் பல்கலை கீழ் உள்ள கல்லுாரியில் படித்துள்ளேன். பி.சி.எஸ்., படிப்பு, பி.காம்., படிப்பிற்கு இணையானது என, 2018ல், தமிழக உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.அரசாணைப்படி, பி.சி.எஸ்., படிப்பு, பி.காம்., படிப்பிற்கு இணையானது என, சான்று வழங்க காமராஜ் பல்கலைக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.நீதிபதி, ஜெ.நிஷா பானு, ''மனுவை, மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...