டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்…
அந்த வட்டாரத்தில் இவர் கடை மிகவும் பிரபலம்...
ஒரு நாள் அந்தக் கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே
"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...
இதுவே என்னைப் போல பெரிய கம்பெனியில் வேலையில் இருந்திருந்தால் நீங்களும் என்னைப் போல பெரிய அளவு முன்னேறி இருக்கலாம் இல்ல" என்றார்....அந்த வட்டாரத்தில் இவர் கடை மிகவும் பிரபலம்...
ஒரு நாள் அந்தக் கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே
"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...
அதைக் கேட்ட அந்த சமோசா கடைப் பெரியவர் புன்னகைத்து விட்டுச் சொன்னார்...
"இல்லை, நான் இப்போது உங்களை விட நன்றாகவே முன்னேறி இருக்கேன்"
"எப்படி?"
"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்தத் தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்றப் போது நீங்கள் இந்தக் கம்பெனியில் அப்போ தான் வேலைக்குச் சேர்ந்திருந்தீங்க...
அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபாய்...
அப்போது உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...
நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...
மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....
இப்போ எனக்கு சொந்தமாக இந்தக் கடை இருக்கு...
இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...
நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதை விட அதிகமாகவே சில சமயம் சம்பாதிக்கிறேன்....
நாளை என் வாரிசுகளுக்கு இந்தத் தொழிலை நான் தர முடியும்...
அவர்கள் என்னைப் போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...
நேரடியாக முதலாளியாக வந்துக் கடையை வளர்த்தால் போதும்...
ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...
உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...
உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்கு மட்டும் தான் போகும்....
உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து தான் துவங்க வேண்டும்...
நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்...
உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும் போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க...
ஒருவேளை உங்க மகன் என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்...
அதைக் கேட்டு திடுக்கிட்ட அந்த மேனேஜர் சமோசாவுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு ஓடியே விட்டார்...
கதையின் நீதி:-
சொந்தத் தொழிலும், விவசாயமும் கைக்கொடுப்பது போல வேறு எதுவுமே நிச்சயமாக கைக்கொடுக்காது…
அடுத்தவர்களுக்கு உழைத்து உழைத்து ஓடாய் போவதை விட நம்முடைய மூளையை நமக்கு ஏற்றத் தொழிலில் இறக்குவது மட்டும் தான் நமக்கு நல்லது .
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...