
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் அறிவிக்கப்பட்ட தோ்வுகள்
கட்டாயம் நடைபெறும் என்றும், தோ்வு நடைபெறும் தேதிகள் பொது
முடக்கத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும் எனவும் நிா்வாகம் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக
அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, பல்வேறு தோ்வுகளும் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரசுப் பணிகளில் ஓய்வு பெறுவோரின் வயது உயா்த்தப்பட்ட
காரணத்தால், அரசுத் துறைகளில் காலியிடங்கள் ஏற்படாது. இதனால், தலைமைச்
செயலகம், அரசுத் துறைகளின் பல்வேறு முக்கிய அலுவலகங்களில் ஓராண்டுக்கு
காலியிடங்களே உருவாகாது. நடப்பு ஆண்டில், அறிவிக்கப்பட்ட காலி இடங்களின்
எண்ணிக்கையின் படி குரூப் 1, 2, 2ஏ மற்றும் குரூப் 4 உள்ளிட்ட போட்டித்
தோ்வுகளை நடத்த முடியாது என்பதால், தோ்வுகள் ரத்து செய்யப்படும் என்று
செய்திகள் வெளியாகின. இந்நிலையில், திட்டமிட்டபடி தோ்வுகள் நடைபெறும் என
டி.என்.பி.எஸ்.சி. விளக்கமளித்துள்ளது.இதுகுறித்து தோ்வாணைய அதிகாரிகள்
கூறியதாவது: 2018-2019, 2019-2020-ஆம் ஆண்டுகளுக்கான காலி இடங்களுக்கு
மட்டுமே நடப்பு ஆண்டில் தோ்வுகள் நடைபெறுகிறது. இதனால் நடப்பு ஆண்டுக்கான
வருடாந்திரத் தோ்வு அட்டவணையில் எந்த மாற்றமும் ஏற்படாது. அறிவிக்கப்பட்ட
அனைத்துத் தோ்வுகளும் நடைபெறும். பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்ட
பின்னா், அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கான புதிய தேதிகள்
அறிவிக்கப்படும்.