கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த
சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி
வருகிறது. மேலும், சீன பொருட்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவி
வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த ஜூன் 29 ஆம் தேதி டிக்
டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன
செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.
இந்தியாவின்
இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் மற்றும்
மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால் இந்த 59 செயலிகளுக்கு
தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்த
செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்ட சில நாட்களில் டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர் இட் லைட் என
செயலிகளின் குளோன்கள் (ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலி) மீண்டும்
இந்தியாவுக்குள் நுழையத்தொடங்கின.
இந்த செயலிகள் அனைத்துமே இந்தியாவால் தடைசெய்யப்பட்ட சீன நிறுவனங்களின் கீழ் இயங்கும் பிரதியாகும்.
இந்நிலையில்,
டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர் இட் லைட் உள்பட 47 சீன செயலிகளிக்கு மத்திய
அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
47
சீன செயலிகளுக்கான தடை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்
வெள்ளிக்கிழமை வெளியாகும் என தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
இந்த தடையின் மூலம் மத்திய அரசு தடை விதித்துள்ள சீன செயலிகளின் மொத்த எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...