ஈரோடு: ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா மருத்துவ பரிசோதனை சான்று அவசியம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய வேகம் எடுத்து பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று 2-வது கட்டமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று புதிதாக, ஈரோடு மாநகராட்சி மூலப்பாளையம், கங்காபுரம், டீச்சர்ஸ் காலனி போன்ற இடங்களில் எட்டு பேருக்கும், கோபி கணபதிபாளையத்தில் ஒருவருக்கும், கவுந்தப்பாடியில் ஒருவருக்கும் என, பத்து பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 296 ஆக உயர்ந்தது. இதுவரை 89 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 202 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா மருத்துவ பரிசோதனை சான்று அவசியம் என்று அம்மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். மேலும் நோய் பரவுவதை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு: ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா மருத்துவ பரிசோதனை சான்று அவசியம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய வேகம் எடுத்து பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று 2-வது கட்டமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று புதிதாக, ஈரோடு மாநகராட்சி மூலப்பாளையம், கங்காபுரம், டீச்சர்ஸ் காலனி போன்ற இடங்களில் எட்டு பேருக்கும், கோபி கணபதிபாளையத்தில் ஒருவருக்கும், கவுந்தப்பாடியில் ஒருவருக்கும் என, பத்து பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 296 ஆக உயர்ந்தது. இதுவரை 89 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 202 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா மருத்துவ பரிசோதனை சான்று அவசியம் என்று அம்மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். மேலும் நோய் பரவுவதை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...