இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ள அரசாணை: தமிழக பள்ளி மாணவர்களுக்கு, மூன்று வழிகளில், 'டிஜிட்டல்' கல்வி வழங்கப்பட உள்ளது. கணினி, 'ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் - டிவி' வகையாகவும்; கணினி மற்றும் ஸ்மார்ட் போன் வழியாகவும்; 'ஆன்லைன்' அல்லாமல், 'போன், டேப்லெட், கணினி, லேப்டாப், தொலைக்காட்சி மற்றும் ரேடியோ' வழியாகவும் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.மேலும், தீக் ஷா செயலி வழியாகவும், பாடங்கள் கற்பிக்கப்படும். வீட்டுப் பள்ளி என்ற திட்டத்தின் வழியாக, வீடியோவில் பாடங்கள் நடத்தப்படும். மாணவர்கள் வீட்டில் இருந்தே கற்றுக் கொள்ளலாம்.
மத்திய அரசின் இ - பாடசாலை திட்டம், தேசிய திறந்தநிலை கல்வி ஆதாரங்கள் இணையதளம், ஸ்வயம் திட்டம் ஆகியவற்றிலும், பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆசிரியர்கள், டிஜிட்டல் வழி பாடத்தை கற்பிக்க, தேவையான முயற்சிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.'யூ டியூப்' வழியாகவும், 'நீட்' தேர்வுக்கான இலவச, ஆன்லைன் பயிற்சி வழங்கப்படுகிறது. இவை அனைத்தையும் கற்பிக்க, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் நலன் கருதி, உரிய விதிகளை பின்பற்ற ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
கற்பித்தல், மாணவர்களிடம் உரையாடுதல், ஆன்லைன் வழியில் தேர்வு நடத்துதல், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தல் உள்ளிட்ட அனைத்து வகை பணிகளும், டிஜிட்டல் கல்வியில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.








