ஊரடங்கு
காரணமாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு,
அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி மதிப்பெண்கள்
நிர்ணயிக்கப்பட்டு, இம்மாதம், 10ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாயின.
இதையடுத்து,
மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், இன்று முதல் பள்ளிகளில்
வழங்கப்பட உள்ளன. வரும், 21ம் தேதி வரை, பள்ளிகளில் சான்றிதழ்களை
பெறலாம்.vஅதேபோல, மதிப்பெண்களில் குறைவு இருப்பதாக கருதும் மாணவர்கள்,
மறுகூட்டலுக்கு பதில், குறைதீர் விண்ணப்பத்தை, பள்ளி தலைமை ஆசிரியரிடம்
அளிக்க வேண்டும்.
இன்று முதல், 25ம் தேதி வரை, இந்த
விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வு துறைக்கு அனுப்பப்படும். அதன்பின்,
மதிப்பெண் இறுதி நிலை குறித்து, மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என, அரசு
தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.