புதியகல்விக்கொள்கை-2020.
பிபிசி தமிழ் கட்டுரை
**************************
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்குவது, தொழில்முறைக் கல்வி, நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள், ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு, வெளியேறுதல், ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்குவது, ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்தை மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வருவது என பல விஷயங்கள் இதில் (புதியகல்விக்கொள்கையில்)
குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த புதிய கல்விக் கொள்கை புதுமையானது என்றும், எந்த புதுமையும் இந்த கல்விக் கொள்கையில் இல்லை என்றும் இரு வேறு கருத்துகள் இதில் நிலவுகின்றன.
இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை தயாரிப்பதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது.
இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்த கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை குறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த கல்வி செயற்பாட்டாளரும், பேராசிரியருமான அனில் சடகோபால்,
"இந்தக் கல்விக் கொள்கையில் எந்த புதுமையும் இல்லை, அறிவுசார் சமூகத்தை அல்லாமல் கூலிகளை உண்டாக்கத்தான் இந்தக் கல்விக் கொள்கை பயன்படும்,"
என தெரிவித்து இருந்தார்.
676 மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ 2 லட்சம் பேரிடம் கருத்துக் கேட்ட பின்னரே இந்தக் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருப்பதாக இந்த புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வேலைத் திட்டத்தின்படியே இந்த கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருப்பதாகச் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்த புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த கல்வி செயற்பாட்டாளர் மற்றும் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "இந்த கல்விக் கொள்கை மீண்டும் குலக்கல்விக்கே வழிவகை செய்யும்," என்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர்,
"அடிப்படையில் சமமான கற்றல் வாய்ப்பை தொடக்கக்கல்வியில் கூட இந்த புதிய கல்விக் கொள்கை தர மறுக்கிறது.
கல்வி உரிமைச் சட்டத்தை 12ஆம் வகுப்பு வரை நீட்டிக்கிறோம் என்கிறார்கள்.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கல்வி உரிமைச் சட்டத்தை வைத்துப் பார்க்கும் போது நிச்சயம் இதனை நேர்மறையான விஷயமாகக் கருத முடியாது.
தனியாருக்கு நிதி அளிக்கத்தான் இது பயன்படும். இந்த தொகையை அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தலாம்," என்கிறார் அவர்.
மேலும் அவர்,
"ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்குள் ஏதாவது ஒரு தொழில் கல்வியை கற்றுக் கொண்டு அதில் திறமையுடன் வெளியே வர வேண்டும் என்கிறார்கள்.
நீங்கள் இந்தியச் சமூகச் சூழலில் இதனைப் பொருத்திப் பாருங்கள் ஒரு மாணவர் 14 வயதில் ஒரு தொழிலில் திறமையாக இருந்தால், அவர் ஆர்வம் எதில் செல்லும்?
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வரும் மாணவர்கள் அந்த வயதில் சரி ஏன் மேலும் படித்துக் கொண்டு, கற்ற தொழிலை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றுவோம் என்றுதானே நினைப்பான்." என்கிறார்.
"பத்தாம் வகுப்பில் அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கிய மாணவன் கூட பதினொன்றாம் வகுப்பில் அறிவியல் பாடத்திட்டத்தை எடுக்கவில்லை.
மருத்துவம் படிக்க நீட் இருக்கிறது.
அதற்குச் செலவு செய்ய முடியாது என்பதுதான் காரணம்.
இதை நான் ஏதோ நடக்காத விஷயத்தைக் கூறவில்லை. நாளிதழ்களில் பதிவான தகவல்கள் இவை.
இப்போது 12 ஆம் வகுப்பு முடித்து உயர் கல்விக்குச் சேர மற்றொரு நுழைவுத் தேர்வு என்கிறீர்கள். அது கட்டாயம் கிடையாது, தேவையென்றால் எழுதலாம் என்கிறீர்கள். யாருக்குத் தேவையென்றால்?
நான் படிக்க விரும்பும் ஒரு பல்கலைக்கழகம் அந்த நுழைவுத் தேர்வு தேவை என்று சொன்னால் நான் என்ன செய்ய?
பள்ளிக் கல்வியை மேம்படுத்துகிறோம், க்ரியேடீவ் லேர்னிங் தருகிறோம் என்கிறீர்கள். பின் ஏன் இந்த தகுதித் தேர்வு?,"
என்று கேள்வி எழுப்புகிறார்.
`மருத்துவம் கேட்ட மாணவிக்கு மரணத்தை பரிசளித்துள்ளார்கள்`
சந்தைக்கு தேவையான கூலிகள்
"உயர்கல்வியில் முதலாம் ஆண்டு முடித்தால் ஒரு சான்றிதழ்,
இரண்டாம் ஆண்டு முடித்தால் ஒரு பட்டயப்படிப்பு என்கிறீர்கள்.
நம் சமூக சூழலை நினைத்துப் பாருங்கள், பொருளாதார அழுத்தத்தைக் கணக்கிட்டுப் பாருங்கள்.
எத்தனை பேர் முழுமையாகப் படிப்பார்கள். ஒரு சான்றிதழ் கிடைத்தவுடன் பலர் வெளியேறிவிட மாட்டார்களா?
இந்த கல்விக் கொள்கையில் நுட்பமான ஏராளமான தடுப்பு அரண்களை வைத்திருக்கிறார்கள்.
சந்தைக்குத் தேவையான கூலிகளை உற்பத்தி செய்யவே இது உதவும்.
குலக்கல்வியை நேரடியாக வலியுறுத்தாமல், மிகவும் தந்திரமாக இதனை வடிவமைத்து இருக்கிறார்கள்," என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
மேலும் இந்த கல்விக் கொள்கை மாநில உரிமைகளைப் பறிக்கிறது என்று கூறும் பிரின்ஸ்,
"இந்திய உயர் கல்விக்கான ஆணையம்தான் உயர் கல்வியைத் தீர்மானிக்கும் என்கிறது இந்த புதிய கல்விக் கொள்கை.
அப்படியானால் பல்கலைக்கழகத்திற்கு இருக்கும் உரிமையும்,
அந்த பல்கலைக்கழகத்தைக் கட்டுப்படுத்தும் மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமையும் இல்லாமல் போகிறதே?" என்கிறார்.
"மேம்போக்காகப் பார்த்தால் சில விஷயங்களைப் பார்த்தால், புதுமையானதாக, புரட்சிகரமானதாகத் தெரியலாம்.
ஆனால், இந்தியச் சமூக சூழலுடன் பொருத்திப் பாருங்கள்.
எளிய மாணவர்களை உயர் பதவிகளுக்கு வராமல் தடுக்கும்,
கூலிகளாக்கும் கல்வி திட்டம் இது.
இது முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றார் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது," என்கிறார்.
மூன்று மொழிகள் கற்க வேண்டும் என்பது குழந்தைகளின் சுமையைத்தான் அதிகரிக்கும் என்று கூறும் அவர்,
"இந்தியை திணிக்கவில்லை என்கிறீர்கள். ஏதாவது ஒரு மொழியை மூன்றாவதாக கற்க வேண்டும் என்கிறீர்கள். அதைதான் ஏன் என்கிறோம்? ஏன் அவர்களை கட்டாயப்படுத்த வேண்டும்? அவர்களுக்கு தேவையான போது எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும்," என்கிறார்.
நன்றி:பிபிசி தமிழ்.
**************************
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்குவது, தொழில்முறைக் கல்வி, நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள், ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு, வெளியேறுதல், ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்குவது, ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்தை மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வருவது என பல விஷயங்கள் இதில் (புதியகல்விக்கொள்கையில்)
குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த புதிய கல்விக் கொள்கை புதுமையானது என்றும், எந்த புதுமையும் இந்த கல்விக் கொள்கையில் இல்லை என்றும் இரு வேறு கருத்துகள் இதில் நிலவுகின்றன.
இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை தயாரிப்பதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது.
இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்த கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை குறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த கல்வி செயற்பாட்டாளரும், பேராசிரியருமான அனில் சடகோபால்,
"இந்தக் கல்விக் கொள்கையில் எந்த புதுமையும் இல்லை, அறிவுசார் சமூகத்தை அல்லாமல் கூலிகளை உண்டாக்கத்தான் இந்தக் கல்விக் கொள்கை பயன்படும்,"
என தெரிவித்து இருந்தார்.
676 மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ 2 லட்சம் பேரிடம் கருத்துக் கேட்ட பின்னரே இந்தக் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருப்பதாக இந்த புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வேலைத் திட்டத்தின்படியே இந்த கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருப்பதாகச் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்த புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த கல்வி செயற்பாட்டாளர் மற்றும் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "இந்த கல்விக் கொள்கை மீண்டும் குலக்கல்விக்கே வழிவகை செய்யும்," என்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர்,
"அடிப்படையில் சமமான கற்றல் வாய்ப்பை தொடக்கக்கல்வியில் கூட இந்த புதிய கல்விக் கொள்கை தர மறுக்கிறது.
கல்வி உரிமைச் சட்டத்தை 12ஆம் வகுப்பு வரை நீட்டிக்கிறோம் என்கிறார்கள்.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கல்வி உரிமைச் சட்டத்தை வைத்துப் பார்க்கும் போது நிச்சயம் இதனை நேர்மறையான விஷயமாகக் கருத முடியாது.
தனியாருக்கு நிதி அளிக்கத்தான் இது பயன்படும். இந்த தொகையை அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தலாம்," என்கிறார் அவர்.
மேலும் அவர்,
"ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்குள் ஏதாவது ஒரு தொழில் கல்வியை கற்றுக் கொண்டு அதில் திறமையுடன் வெளியே வர வேண்டும் என்கிறார்கள்.
நீங்கள் இந்தியச் சமூகச் சூழலில் இதனைப் பொருத்திப் பாருங்கள் ஒரு மாணவர் 14 வயதில் ஒரு தொழிலில் திறமையாக இருந்தால், அவர் ஆர்வம் எதில் செல்லும்?
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வரும் மாணவர்கள் அந்த வயதில் சரி ஏன் மேலும் படித்துக் கொண்டு, கற்ற தொழிலை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றுவோம் என்றுதானே நினைப்பான்." என்கிறார்.
"பத்தாம் வகுப்பில் அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கிய மாணவன் கூட பதினொன்றாம் வகுப்பில் அறிவியல் பாடத்திட்டத்தை எடுக்கவில்லை.
மருத்துவம் படிக்க நீட் இருக்கிறது.
அதற்குச் செலவு செய்ய முடியாது என்பதுதான் காரணம்.
இதை நான் ஏதோ நடக்காத விஷயத்தைக் கூறவில்லை. நாளிதழ்களில் பதிவான தகவல்கள் இவை.
இப்போது 12 ஆம் வகுப்பு முடித்து உயர் கல்விக்குச் சேர மற்றொரு நுழைவுத் தேர்வு என்கிறீர்கள். அது கட்டாயம் கிடையாது, தேவையென்றால் எழுதலாம் என்கிறீர்கள். யாருக்குத் தேவையென்றால்?
நான் படிக்க விரும்பும் ஒரு பல்கலைக்கழகம் அந்த நுழைவுத் தேர்வு தேவை என்று சொன்னால் நான் என்ன செய்ய?
பள்ளிக் கல்வியை மேம்படுத்துகிறோம், க்ரியேடீவ் லேர்னிங் தருகிறோம் என்கிறீர்கள். பின் ஏன் இந்த தகுதித் தேர்வு?,"
என்று கேள்வி எழுப்புகிறார்.
`மருத்துவம் கேட்ட மாணவிக்கு மரணத்தை பரிசளித்துள்ளார்கள்`
சந்தைக்கு தேவையான கூலிகள்
"உயர்கல்வியில் முதலாம் ஆண்டு முடித்தால் ஒரு சான்றிதழ்,
இரண்டாம் ஆண்டு முடித்தால் ஒரு பட்டயப்படிப்பு என்கிறீர்கள்.
நம் சமூக சூழலை நினைத்துப் பாருங்கள், பொருளாதார அழுத்தத்தைக் கணக்கிட்டுப் பாருங்கள்.
எத்தனை பேர் முழுமையாகப் படிப்பார்கள். ஒரு சான்றிதழ் கிடைத்தவுடன் பலர் வெளியேறிவிட மாட்டார்களா?
இந்த கல்விக் கொள்கையில் நுட்பமான ஏராளமான தடுப்பு அரண்களை வைத்திருக்கிறார்கள்.
சந்தைக்குத் தேவையான கூலிகளை உற்பத்தி செய்யவே இது உதவும்.
குலக்கல்வியை நேரடியாக வலியுறுத்தாமல், மிகவும் தந்திரமாக இதனை வடிவமைத்து இருக்கிறார்கள்," என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
மேலும் இந்த கல்விக் கொள்கை மாநில உரிமைகளைப் பறிக்கிறது என்று கூறும் பிரின்ஸ்,
"இந்திய உயர் கல்விக்கான ஆணையம்தான் உயர் கல்வியைத் தீர்மானிக்கும் என்கிறது இந்த புதிய கல்விக் கொள்கை.
அப்படியானால் பல்கலைக்கழகத்திற்கு இருக்கும் உரிமையும்,
அந்த பல்கலைக்கழகத்தைக் கட்டுப்படுத்தும் மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமையும் இல்லாமல் போகிறதே?" என்கிறார்.
"மேம்போக்காகப் பார்த்தால் சில விஷயங்களைப் பார்த்தால், புதுமையானதாக, புரட்சிகரமானதாகத் தெரியலாம்.
ஆனால், இந்தியச் சமூக சூழலுடன் பொருத்திப் பாருங்கள்.
எளிய மாணவர்களை உயர் பதவிகளுக்கு வராமல் தடுக்கும்,
கூலிகளாக்கும் கல்வி திட்டம் இது.
இது முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றார் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது," என்கிறார்.
மூன்று மொழிகள் கற்க வேண்டும் என்பது குழந்தைகளின் சுமையைத்தான் அதிகரிக்கும் என்று கூறும் அவர்,
"இந்தியை திணிக்கவில்லை என்கிறீர்கள். ஏதாவது ஒரு மொழியை மூன்றாவதாக கற்க வேண்டும் என்கிறீர்கள். அதைதான் ஏன் என்கிறோம்? ஏன் அவர்களை கட்டாயப்படுத்த வேண்டும்? அவர்களுக்கு தேவையான போது எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும்," என்கிறார்.
நன்றி:பிபிசி தமிழ்.