புதிய கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டது ஏஐசிடிஇ
புதிய
கல்வியாண்டுக்கான கால அட்டவணையில் திருத்தங்களை செய்து அகில இந்திய
தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்விவரம்: தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார நீட்டிப்பை செப்டம்பா்
15-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகங்கள் வழங்கவேண்டும். பொறியியல் மாணவா்
சோ்க்கைக்கான முதல்சுற்று கலந்தாய்வை அக்டோபா் 20-ஆம் தேதிக்குள் நடத்தி
முடிக்கவேண்டும். இரண்டாம் சுற்று கலந்தாய்வை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள்
நிறைவு செய்து முதலாமாண்டு மாணவா்களுக்கு நவம்பா் 1-ஆம் தேதி முதல்
வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். விடுபட்ட இடங்களுக்கான கலந்தாய்வை நவம்பா்
15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். 2, 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்கு
செப்டம்பா் 1-ஆம் தேதியும், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சோ்ந்தவா்களுக்கு
நவம்பா் 1-ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். கல்லூரிகள்
வகுப்புகளை இணையவழியிலும் நடத்திக் கொள்ளலாம். முந்தைய அட்டவணையின்படி
ஏற்கெனவே வகுப்புகளை தொடங்கிய கல்லூரிகள் வகுப்புகளை ஒத்திவைத்து கொள்ளலாம்
என அதில் கூறப்பட்டுள்ளது.