இயற்கை பேரிடர் வரும் போதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதலில் மனம் இரங்குபவர்களும், களத்தில் இறங்குபவர்களும் எம் ஆசிரியப் பேரினமே...
தங்களது ஒரு நாள் ஊதியத்தை அரசுக்குக் கொடுப்பதோடு, தம்மால் இயன்றவரை நிதி திரட்டி பாதிக்கப்பட்டோர்க்கு இன்றளவும் உதவிடும் இனம் எம் ஆசிரியப் பேரினமே....
நீங்கள் நிச்சயமாக ஆரம்பக் கல்விக்காக பள்ளிக்கூடம் சென்றிருப்பீர்கள்..
அப்போதிலிருந்தே ஆசிரியர் சொல்பேச்சைக் கேட்டு நீங்கள் படித்திருந்தால் இன்று சமுதாயாத்தில் கல்வியால் நீங்களும் உயர்ந்து நின்றிருப்பீர்களே....
உங்கள் வாழ்க்கையை, வாழ்க்கை முறையை நீங்களே தீர்மானித்து விட்டு, அதை மாற்ற முயற்சிக்கும் ஆசிரியர்களுக்கும் செவிமடுக்காமல் விட்டு விட்டு ஆசிரியர்களின் ஊதியம் குறித்து புலம்புகிறீர்களே இது நியாயமா??
உங்களைப் போலவே ஆசிரியர்களும் இம்மண்ணில் பிறந்தார்கள்..
ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டார்கள்.. இன்று ஆசிரியர்களாகவே உருவெடுத்துள்ளார்கள்...
நீங்கள் தான் உங்கள் வாய்ப்பை நழுவ விட்டீர்கள்... உங்கள் பிள்ளைகளின் வாய்ப்பையும் பறித்து விடாதீர்கள்...
உங்கள் பிள்ளைகளையும் உங்கள் வழியே இழுத்து விடாமல் அவர்களுக்கு நல்லதை எடுத்துக் கூறி, பள்ளிக்கு அனுப்புங்கள் உங்கள் பிள்ளைகளை எங்களை விட உயர்ந்த இடத்தில் அமர வைக்கும் ஆற்றல் எங்களைத் தவிர வேறு எவருக்கும் கிடையாது...
ஆசிரியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செய்திகளையும், பேட்டிகளையும் வெளியிடும் ஊடகவாசிகளே,,,
நீங்கள் செய்திகள் வாசிப்பதற்கும், எங்களைப் பற்றி தாறுமாறாக யோசிக்கவும் உங்களால் எப்படி முடிகிறது...
உங்களுக்கு வாசிப்பதற்கும், எழுதுவதற்கும், கணக்குப் போடுவதற்கும் கற்றுக் கொடுத்தது யார்????
ஓர் ஆசிரியர் தானே உங்கள் வாழ்க்கையிலும் ஒளியேற்றி இருப்பார்..
ஆசிரியர்களின் உதவி இன்றி தானாகப் படித்து வளர்ந்து வந்தீர்களா???
சற்று நிதானமாக யோசித்து ஆசிரியர்களின் மீது பொறாமை கொள்ளுங்கள்..
உங்கள் TRP க்காக அப்பாவி மக்களை மூளைச்சலவை செய்து எங்களுக்கு எதிராக தூண்டி விடாதீர்கள்..
ஆசிரியர்களைப் போற்றும் தேசங்கள் முன்னேற்றப் பாதையில் செல்லும்..
ஆசிரியர்களைத் தூற்றும் தேசங்கள்.....
சபிக்கக் கூட மனம் வரவில்லை...
இது தான் எங்கள் ஆசிரியர் இனம்.
உனக்கெல்லாம் பதில் சொல்லி உன்ன பெரிய ஆளா ஆக்கனுமான்னு தான் தோணுச்சு..
ஆனால் பாவம் உன் பேச்சைக் கேட்டு அப்படியே திருப்பி பேட்டி கொடுத்தார்களே அவர்களுக்கு எங்களைப்பற்றி முழுமையாகத் தெரிய வேண்டுமே என்பதற்காகத்தான் இப்பதிவு
இது ஒரு தேவையற் செய்தி
ReplyDeleteமேலும் ஓவ்வொரு அரசு அலுவலகங்களிலும் 30 -50% வரை மட்டுமே வேலை செய்து வருகிறார்கள்
மேலும் இவர்கள் ஒப்பிடுவது எந்தவித சம்பந்தமும் இல்லாதவர்களையும். துறையில் நடப்பது என்வென்று அறியாத பாமரர்களை வைத்து பேட்டி என்ற பெயரில் ஒரு அவலத்தை அரங்கேற்றி தனக்கு தானே ஏதோ செய்து கொள்வது போல் உள்ளது
எந்த ஒரு துறை வேலையையும் வேறு எந்த துறை வேலையுடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாது
இந்த ஒரு சிறிய அளவிலான புரிதல் கூட இல்லாதது மிகவும் வேதனையாக உள்ளது
அதோடு மட்டும் அல்லாது பேட்டி எடுப்பவரே அவர்களிடம் தவறுதலான கருத்துக்களை தினணிப்பது போல் தெரிகிறது
இவ்வளவு கீழ்த்தரமாக ஆசிரியர்களை சித்தரிப்பது யாரை திருப்திபடுத்த?