தேவையான பொருட்கள்
தண்ணீர் - 1 கப்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகு பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்ப் பொடி - 1 டீஸ்பூன்
துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு
வெற்றிலை - 6 இலைகள்
தூதுவளை இலை - ஒரு கைப்பிடி அளவு
புளி கரைசல் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
தக்காளி - ஒன்று
சிவப்பு மிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
செய்முறை
துளசி, வெற்றிலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, சூடானவுடன், மஞ்சள் பொடி, துளசி இலை,
வெற்றிலை, தூதுவளை இலை, புளி கரைசல், இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய்,
உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதி வைக்கவும்.
நன்றாக கொதித்து சாறு நன்றாக இறக்கியதும் வடிகட்டி மிளகுப் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து சூடான சூப்பைப் பரிமாறவும்.
சூப்பரான வெற்றிலை துளசி சூப் ரெடி.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...