சில சமூக வலைத்தளங்கள் மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருப்பதாக ரஷியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
சமூக
வலைத்தளங்களும், மொபைல் போனும் மனித வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டன.
சமூக வலைத்தளங்களில் மணிக்கணக்கில் நேரம் செலவழித்து இளம் தலைமுறையினர்
எதிர்காலத்தை வீணடிக்கின்றனர் என்ற பொதுவான குற்றச்சாட்டு இருக்கும்
நிலையில், பல சமூக வலைத்தளங்கள் மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக
இருக்கின்றன என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின்
ஹெச்.எஸ்.இ. பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த ஆய்வில், நல்ல பயனுள்ள சமூக
வலைத்தளங்கள், மாணவரின் கல்வித்திறனில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்
என்றும் அதன் மூலமாக மாணவர்கள் எளிதாக பல விஷயங்களை கற்றுக்கொள்வதாகவும்
கூறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவைச்
சேர்ந்த 117 மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மாணவர்கள் தங்கள்
நண்பர்களையும், ஆசிரியர்களையும் தேர்ந்தெடுக்கும் விதம் குறித்தும்
அவர்களது கல்வி செயல்திறன் குறித்தும் கண்காணிக்கப்பட்டது.
அதன்படி,
‘குடும்பத்தின் சமூக பொருளாதார நிலை, சுயகற்றலுக்காக செலவழிக்கும் நேரம்,
வேலையில் ஈடுபடும் நேரம், பள்ளி சூழ்நிலை உள்ளிட்டவை மாணவர்களின் கல்வி
செயல்திறனை பாதிக்கும் காரணிகளாக உள்ளன.
ஆனால், ஒரு மாணவர்
வகுப்பில் படிப்பதை விட தனியே சமூக வலைத்தளங்களின் மூலமாக அறிவைப் பெறுவது
சிறந்தது. ஏனெனில், வகுப்பறையில் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு, பொறாமை,
போட்டி என இருக்கும். ஆனால், தனியே பயிலும்போது கூடுதல் நம்பிக்கை
கிடைக்கிறது’ என்று ஆய்வு கூறுகிறது.
அதுமட்டுமின்றி,
‘நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில், மாணவர்கள் பொதுவாக அவர்களின் கல்வித்
திறமையை கருத்தில் கொள்வதில்லை எனவும், ஆனால், காலப்போக்கில் இது மாறுபட்டு
அனைவரும் ஒரே நிலையில் செயல்பட முனைகிறார்கள் என்றும் ஆசிரியர்கள்
கூறுகின்றனர். வயதுமிக்க சாதனையாளர்களுடன் இருப்பவர்கள் தங்களது திறமையைத்
தொடர்ந்து வளர்த்துக்கொள்கின்றனர். குறைந்த அல்லது சக வயதுடைய நண்பர்களிடம்
பழகுபவர்கள் பெரிதாக திறமையில் அக்கறை காட்டுவதில்லை’ என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...