
தமிழக அரசு உத்தரவின் பேரில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத் தேர்வு கடந்த 21ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் பிளஸ்-1 துணைத் தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
ஈரோட்டில் பிளஸ் 1 துணைத்தேர்வு எழுத 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதுவோருக்கு 6 மையங்களும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுவோருக்கு 2 மையங்கள் என 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு வரும் அக்டோபர் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல் 8 -ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வும் நாளை முதல் தொடங்க உள்ளது இந்த தேர்வுக்காக ஈரோடு கருங்கல்பாளையம் ,ஈரோடு கார்மல் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வு வரும் 7-ந் தேதி நிறைவு பெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தேர்வுக்கான முன் ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.