வாழைப்பூ - 1
மஞ்சள்தூள் - ½ ஸ்பூன்
கல் உப்பு - தேவைக்கேற்ப
நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 1 ஸ்பூன்
கடுகு - ½ ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
உளுந்து பருப்பு - 1 ஸ்பூன்
சீரகம் - ½ ஸ்பூன்
கடலை பருப்பு - ½ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தனியா தூள் - ½ ஸ்பூன்
செய்முறை:
வாழைப்பூவின் நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய வாழைப்பூ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து பருப்பு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு கடலை பருப்பு, தனியா தூள், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பி.மிளகாய், சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை கிளறவும்.








