தமிழக முதல்வரின் மருத்துவப் படிப்புக்கான 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் எம்.பி.பி.எஸ். மாணவன் தேர்வாகியுள்ளது அப்பள்ளி ஆசிரியர்களும் அப்பகுதியினருக்கும் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி பள்ளி 1963ல் துவங்கப்பட்டது. பின் 2002ல் இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த ரதிவாணன் எனும் மாணவன் தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீத மருத்துவப்படிப்புக்கான இடஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிக்க தேர்வாகியுள்ளார்.
ரதிவாணனின் தந்தை சாமிநாதன் (52). இவரது சொந்த ஊர் கரைவெட்டி பரதூர் கிராமம். அங்கு 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வரும் சராசரி குடும்பம் இவர்களுடையது. ரதிவாணனுக்கு ஒரு சகோதரரும் இரண்டு சோகதிரிகளும் உள்ளனர். அவர்களில் சகோதரி ஒருவர் பி.எஸ்.ஸி. கணிதமும், இன்னொருவர் டி.ஃபார்மும் படித்துள்ளனர். சகோதரர் ஒருவர் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
2002ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு 18 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக கீழக்காவட்டாங்குறிச்சி பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர் ஒருவர், மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளது அப்பள்ளி ஆசிரியர்களுக்கும் அப்பகுதியினருக்கும் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரதிவாணனை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா, நேரில் அழைத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...