நவம்பர் 25-ம் தேதி அன்று புயல் ஏற்படும் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான புயல் அதி தீவிர புயலாக மாறி, நாளை காலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, தமிழக அரசு, இன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், பேருந்து மற்றும் ரயில் மற்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நிவர் புயல் எரொலியாக, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை-க்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நவகிரகங்களின் இடப் பெயர்ச்சியை வைத்து பஞ்சாங்கத்தில் பலன்கள் கணிக்கப்படுகின்றன. 2020ஆம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி சென்னையில் விடிய விடிய மழை பெய்யும் என்று பல மாதங்களுக்கு முன்பே மிக துல்லியமாக பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைத் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கும் என்றும், இயற்கை சீற்றம் காரணமாக சென்னை, கடலூர், மாயவரம், திருவாரூர், மதுரை, திருச்சி, ராமேஸ்வரம் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கும் என்று 2020-2021 -ம் ஆண்டு, சார்வரி வருடத்திய சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...