வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு தற்போது வலிமையாகியுள்ளதால், வரும் 25-ந்தேதி பநிவர் புயலமாக மாறி கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வாணிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இது அதிதீவிர புயலாக மாறி 100 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புயல் காரணமாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை ஆகிய ஏழு மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பொது போக்குவரத்து நிறுத்தப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மறு அறிவிப்பு வரும்வரை இந்த போக்குவரத்து இயங்காது எனத் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் கூடுமான அளவிற்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.