வரும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா பரவல் இன்னும் குறையாத சூழலில் தீபவாளியை பாதுகாப்பான முறையில் கொண்டாட கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில்,
- குறைந்த ஒலி எழுப்பும் தன்மைக் கொண்ட பட்டாசுகளை வெடிக்கலாம்.
- சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்கலாம்.
- அரசு அனுமதிதுள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
- அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
- மருத்துவமனை பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்,
என்று தமிழக மாசு கட்டுபாட்டு வாரியம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.