இதற்கு தேவைப்படும் பொருள்கள் :
பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி , சிக்கன் மசாலா – 1/2 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி , உப்பு – போதுமான அளவு, மல்லித்தழை – சிறிது
வறுத்து அரைக்க தேவைப்படும் பொருள்கள் :
மிளகாய் வத்தல் – 2, கொத்தமல்லி – 2 மேஜைக்கரண்டி , பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி, மிளகு – 1/2 தேக்கரண்டி , பட்டை – 1/2 இன்ச் அளவு , கிராம்பு – 1
அரைக்க தேவைப்படும் பொருள்கள் :
தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி, பொட்டுக்கடலை – 1 மேஜைக்கரண்டி, முந்திரிப்பருப்பு – 4,
கசகசா – 1/2 தேக்கரண்டி
தாளிக்க தேவைப்படும் பொருள்கள் :
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி , பட்டை – 1/4 இன்ச் அளவு , கிராம்பு – 1, வெங்காயம் – 1/4 பங்கு ,
கறிவேப்பிலை – சிறிது
இதனை செய்யும் முறை:
முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். தாளிப்பதற்கு தேவையான கால் பங்கு வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும். அதையடுத்து அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு போன்றவற்றையும் போட்டு ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை அணைத்து விடவும். இதில் ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். அதன்பிறகு அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கி கொள்ளவும்.
இதில் வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து சுருண்டு வரும் வரை வதக்கி சிறிது நேரம் ஆற வைக்கவும் . பின்னர் ஆறிய பின் மிக்ஸ்சியில் கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். தொடர்ந்து தேங்காய் துருவல், பொட்டுக் கடலை, முந்திரிப்பருப்பு, கசகசா எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும்.
பட்டை பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். இதில் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அதையடுத்து திரித்து வைத்துள்ள மசாலா பொடி, உப்பு, சிக்கன் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து அதோடு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இதில் மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். அதன் பிறகு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். அதையடுத்து மல்லித் தழையை தூவி அடுப்பை அணைத்து விடவும் . இப்போது சுவையான எம்டி சால்னா தயார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...