இதற்கிடையே, நாடு முழுதும், கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. வரும் 13-ம் தேதியில் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே,கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி போடும் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
நாடு முழுவதும் வரும் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். முன்கள பணியாளர்களைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். 50 வயதுக்கு மேற்பட்டோரை தொடர்ந்து இணை நோய்கள் உள்ள 50 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். முன்கள பணியாளர்கள் தவிர, மேலும், 27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.