ஜே.இ.இ.
அட்வான்ஸ்டு தேர்வுகள் வரும் ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு
தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி
நிறுவனத்தில் சேர ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதில்
முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் அட்வான்ஸ்டு தேர்வு எழுத தகுதி
பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு
வரும் ஜூலை 3- ம் தேதி ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு நடைபெறும் என மத்திய
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார்.