நாம் உண்ணும் உணவில் சாரணமாகவே பல இயற்கை குணமுள்ள நன்மைகள் நிறைந்திருக்கிறது.

ஆனால் நாம் வெறுக்கும் சில பொருட்களில் மருத்துவக்குணம் நிறைந்திருக்கிறது. அதிலும் சில முக்கியமான உணவாக சீரகம் உள்ளது. குறிப்பாக தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் உண்டு. நாள்தோறும் சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். அதுமட்டுமின்றி மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துக் கொண்டால் வாயுத் தொல்லை நீங்கும். ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும்.

இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம். திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைத் தூள் சேர்த்துக் கொண்டால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.
அதுமட்டுமின்றி, சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.

இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும். மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும.
அதுமட்டுமின்றி சீரகத்தை தினந்தோறும் சேர்த்துக் கொண்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை நாம் நன்கு அறிய முடியும்.









