சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தேதி அட்டவனையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் , தளர்வுகள் காரணமாக முதல்கட்டமாக 10, 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 19ந்தேதி பள்ளிகள் தொடங்கப்பட்டன. பின்னர், 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் பாடத்திட்டங்களும் 40 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டது.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப்படுகின்றன. மேலும் செய்முறை வகுப்புகளும், வாரத்தில் இரண்டு நாக்ள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் தற்போது பிளஸ்-2 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு தேதிக்கான அட்டவனையை வெளியிட்டு உள்ளது.