அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை உயிரி தொழில்நுட்பவியல் படிப்பில்
உயர்சாதி ஏழை பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு முறை அமலுக்கு
வந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதி
பங்களிப்போடு, முதுகலை பயோ டெக்னாலஜி மற்றும் கம்பியூடேஷனல் பயோடெக்னாலஜி
பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளுக்கான
நுழைவுத் தேர்வை மாநிலங்களில் உள்ள அந்தந்த கல்வி நிறுவனங்களே நடத்திக்
கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து, நுழைவுத் தேர்வை
நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசிடம்
அனுமதி கோரியது. ஆனால், தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தினால் மட்டுமே
இதற்கு அனுமதி அளிக்க முடியும் என தமிழக அரசு திட்டவட்டமாக
தெரிவித்துவிட்டது.
இதன் காரணமாக இந்த ஆண்டு குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில்
மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இதனை
எதிர்த்து நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் நடப்பாண்டு
மாணவர் சேர்க்கையை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை
தொடர்ந்து, முதுகலை பயோ டெக்னாலஜி பிரிவில் உள்ள 25 இடங்களுக்கான மாணவர்கள்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. அதில் உயர்சாதி ஏழை பிரிவில் 3 இடங்கள்
நிரப்பப்பட்டுள்ளன. இதில், 20-க்கும் மேற்பட்டவர்கள் வடமாநிலங்களை
சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு கோவை பாரதியார்
பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி பிரிவில் உயர்சாதி ஏழைகளுக்கான இட
ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில்
அமல்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...