பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பராமரிப்பு மையங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அந்தந்த மாவட்ட, மாநகர நிர்வாகங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 562 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தினசரி 100 க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தொற்று உறுதியாவோர் விகிதம் 1.45% லிருந்து 1.75 % ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மாவட்டத்திற்கு ஒரு கோவிட் பராமரிப்பு மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 4000 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள புளியந்தோப்பு பராமரிப்பு
மையம் மீண்டும் பயன்பாட்டிற்கு வருகிறது. வைரஸ் தொற்று குறைந்த நிலையில்,
அக்டோபர் இறுதியில் கொரோனா பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...