*⚫இரங்கல் செய்தி*
*கிருஷ்ணகிரி
மாவட்டம் வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.
நரசிம்ம மூர்த்தி (வயது 55) அவர்கள் உடல் நலக்குறைவு (கொரோனா தொற்று)
*காரணமாக நேற்று இரவு காலமாகிவிட்டார். அன்னாரை இழந்து வாடும் அவரது
குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து
கொள்கின்*
*தொடரும் ஆசிரியர்கள் மரணம்!*
*மௌனம் காக்கும் அரசாங்கம்!!*
*இன்னும் எத்தனை பேரை தான் காவு கேட்கும் இந்த பள்ளிக் கல்வித்துறை*
*வேகமாக
பரவி வருகின்ற உருமாற்றமடைந்த கொரோணா வைரஸால் ஒட்டு மொத்த இந்தியாவே
கதிகலங்கி போயுள்ள இந்த சூழலில் தலைமையாசிரியர் பெருமக்களும் ஆசிரியர்
பெருமக்களும் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருவது மிகுந்த வருத்தத்தை
தருகின்றது*
*இந்த இக்கட்டான காலகட்டத்திலும்
பள்ளிக்குச் சென்று கல்வித்துறை கட்டளையிட்ட அனைத்து பணிகளையும் செவ்வனே
செய்து முடித்து தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்து வரும்
ஆசிரியர் சமுதாயத்தினரிடையே இத்தகைய மரணங்கள் மாபெரும் பீதியை
கிளப்பியுள்ளன*
*ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு
வரை தேர்வுகள் இன்றி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பும்
வந்துவிட்டது,தேர்வு எழுத இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு
ஒத்தி வைக்கப்பட்டுள்ளது,மரணம் பயங்களுக்கு இடையேயும் மாணவர்களுக்கு
செய்முறைத் தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது*
*இத்தகைய
சூழலில் மாணவர்களே வராத பள்ளிக்கு ஆசிரியர்களை வரவழைத்து அவர்கள் உயிரோடு
விளையாடிக்கொண்டு இருக்கின்றது இன்றைய தமிழக பள்ளிக்கல்வித்துறை*
*ஆளே
இல்லாத கடையில் யாருக்கு யா டீ ஆத்துர என்று திரைப்படத்தில் வரும்
நகைச்சுவை காட்சியைப் போல பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களை
அலைக்கழிக்கிறது.யாரை திருப்திப்படுத்த இத்தகைய கொடூர நிகழ்வினை
நடத்திக்கொண்டுள்ளதோ தெரியவில்லை*
*ஆசிரியர்
சங்கங்களும் இயக்கங்களும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற
நிலையிலும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஏனோ செவிகள் மூடியே
உள்ளன...ஆசிரியர்கள் உயிர்தானே தானே போனால் போகட்டும் ஆட்குறைப்பு
ஆகட்டும்- அதனால் அரசாங்கத்திற்கு லாபம் தானேஎன்று நினைக்கிறார்களோ
என்னவோ!*
*தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும்
இனிமேலாவது நம் மீது கவனத்தைத் திருப்புமா அல்லது தொடர்ந்து மரண ஓலங்களை
கேட்டுக்கொண்டே ரசித்துக்கொண்டே இருக்குமா?உயிரோடு இருந்தால் அதையும்
பொறுத்திருந்து பார்ப்போம்*
இவண்
*தமிழ்நாடு அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*
*கிருஷ்ணகிரி மாவட்டம்*